செய்திகள் :

மெக்காவுக்குச் சென்ற முகமது சிராஜ்..!

post image

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புனிதப் பயணமாக மெக்காவுக்குச் சென்றுள்ளார்.

கடந்த இரவு முகமது சிராஜ் சம்சாபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய விமான நிலையத்தில் இருந்து மெக்கா புறப்பட்டதாக விடியோ வெளியாகியுள்ளது.

தனது இன்ஸ்டா பக்கத்தில் இதை உறுதிசெய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிராஜ். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஒவ்வொரு இஸ்லாமியரும் செல்ல வேண்டும் என்பது அந்த மார்க்கம் வலியுறுத்தும் கடமைகளில் ஒன்றாகும். அதன்படி, ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தப் புனிதப் பயணம் சிராஜுக்கு முதல் முறையல்ல. ஏற்கனவே, 2019இல் குடும்பத்தினருடன் மெக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடியான நிலையில் சிராஜ்

ஐபிஎல் 2025க்கு முன்பாக ரமலான் வரவிருப்பதால் இந்தப் புனிதப் பயணத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

30 வயதாகும் சிராஜ் தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் கடுமையான காலகட்டத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பிஜிடி தொடரில் சுமாரான செயல்பாடுகளால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் தேர்வாகவில்லை. ஏற்கனவே பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணிக்கு இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பிஜிடி தொடரில் 10 இன்னிங்ஸில் 20 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபியில் இல்லாதது மட்டுமில்லாமல் ஆர்சிபி அணியும் இவரை அணியில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க