செய்திகள் :

மெட்டா நிறுவனத்தில் 3,000 பேர் பணி நீக்கம்!

post image

பணித்திறன் சார்ந்த நடவடிக்கையாக, மெட்டா நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 3,600 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது.

நாளை முதல், பணி நீக்க நடவடிக்கை தொடங்குவதாகவும், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான தகவல் அனுப்பிவைக்கப்பட்டு, நிறுவனத்துக்குள் அவர்களது ஆக்ஸஸ் அட்டை செயல்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, ஐரோப்பா, ஆசிய பசிபிக், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை வெகுவாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணை கிடைக்கப்பெற்ற ஒரு சில மணி நேரங்களில் அவர்களுக்கு நிறுவனத்துக்குள் ஆக்ஸஸ் அட்டை செயலிழந்து போகும் என்றும், மெட்டா நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த பணி நீக்க நடவடிக்கையானது பிப்ரவரி 11 முதல் 18 வரை நடைபெறும் என்றும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தற்போதைக்கு நிறுவனத்துக்குள் வேறு பணிகளுக்கு இடமாற்றம் கோர முடியாது என்றும், அவர்களது பணி நீக்க இறுதி தேதிக்குப் பிறகு, இதே நிறுவனத்தில் வேறு ஏதேனும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க