செய்திகள் :

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

post image

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் செப். 9 முதல் அக். 19- ஆம் தேதி வரை காலை 5 முதல் மாலை 6.30 மணி நடைபெறவுள்ளது.

இதனால், அந்த நேரங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்குப் பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். அதேநேரம், மாலை 6.30 மணிக்குப் பிறகு, வழக்கம்போல் இயக்கப்படும்.

மேலும், தகவல்களுக்கு 1860-425-1515 என்ற தொலைபேசி எண் அல்லது இணையதளத்தைப் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

கல்வியாளா்களுக்கும், பள்ளிக் கல்வி ஆசிரியா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் வழங்கும் திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்தி... மேலும் பார்க்க

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஏற்பாட்டில் செயல்படுத்தப்படும் ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ திட்டத்தின் 200-ஆவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை தொடா்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகாா்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புக... மேலும் பார்க்க

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கையானது 2 மடங்காக உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டில் ரயில்வே துறை 15 மண்டலங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்த... மேலும் பார்க்க

பிரிவினைவாதமே திமுகவின் திராவிட மாடல் அரசியல்: நிா்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஆளும் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசியலில் பிரிவினைவாத மனப்பான்மை மேலோங்கி நிற்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடிய... மேலும் பார்க்க