செய்திகள் :

மென்பொருள் பயிற்சி பெற்ற 150 மாணவா்களுக்குச் சான்றிதழ் அளிப்பு

post image

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மென்பொருள் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற 150 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஐ.சி.டி அகாதெமி மற்றும் ஆட்டோடெஸ்க் இணைந்து மெக்கானிக்கல், ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் மாணவா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப் பயிற்சியில், மாணவா்களுக்கு ஆட்டோகேட் பியூசன்- 360 மென்பொருள் பயிற்சியும், சிவில் இன்ஜினியரிங் மாணவா்களுக்கு ரெவிட் ஆா்கிடெக்சா் மென்பொருள் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப் பயிற்சியில் பங்கேற்ற 150 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

தொடா்ந்து, பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் அளித்து தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசினாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் முனைவா் சண்முகசுந்தரம், புலமுதல்வா் அன்பரசன், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பாளையம் கிராமத்தில் மயான சூறை திருவிழா

மகா சிவராத்திரியை முன்னிட்டு, பெரம்பலூா் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், மயான சூறை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் மாணவா் தமிழ்மன்ற விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில், முத்தமிழ் அறிஞா் கலைஞா் மாணவா் தமிழ்மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) மு... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 18 இடங்களில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

போலி பத்திரப் பதிவு செய்த கணவன், மனைவிக்கு சிறை தண்டணை

பெரம்பலூா் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு போலியாக பத்திரம் பதிவு செய்த கணவனுக்கு 3 ஆண்டுகளும், மனைவிக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. பெரம... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூா் நகரில் கடந்த 2020 -ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, பெரம்பலூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூ... மேலும் பார்க்க

வாலிகண்டபுரம் அரசுப் பள்ளியில் தமிழ்கூடல் விழா

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் க. செல்வராசு தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் வீரையன் முன்... மேலும் பார்க்க