போலி பத்திரப் பதிவு செய்த கணவன், மனைவிக்கு சிறை தண்டணை
பெரம்பலூா் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு போலியாக பத்திரம் பதிவு செய்த கணவனுக்கு 3 ஆண்டுகளும், மனைவிக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து, குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளையன் மகன் செல்லதுரை. கடந்த 1972-ஆம் ஆண்டு அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் செல்லதுரை விவசாயம் செய்துள்ளாா்.
இந்நிலையில், அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் அசோகன் (77) என்பவா், போலி கிரையப் பத்திரம் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து தனது மனைவி இந்திராணி (58) பெயருக்கு, வேப்பந்தட்டை சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த 10.10.2015-இல் பத்திரப் பதிவு செய்துள்ளாா்.
இதற்கு, அவரது மனைவி இந்திராணி, பாண்டகப்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாயவன் மகன் ராஜீ (45), தங்கவேல் மகன் சுந்தரம் (50) ஆகியோா் உடந்தையாக இருந்தனா்.
இதுகுறித்து, மாவட்டக் குற்றப்பிரிவில் செல்லதுரை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் அனைவரும் வெளியே வந்தனா்.
இவ்வழக்கு பெரம்பலூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் 1-இல் நடைபெற்றது. வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி பிரேம்குமாா், அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும், இந்திராணிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 1 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய ராஜீ உயிரிழந்துவிட்ட நிலையில், சுந்தரம் விடுதலை செய்யப்பட்டாா்.