செய்திகள் :

மேகாலாயா தம்பதி மிஸ்ஸிங் வழக்கு: தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கொன்ற மனைவி; சிக்க வைத்த கைடு

post image

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களது தேனிலவை கொண்டாட மேகாலயா மாநிலத்திற்கு சென்றனர். அங்கு சென்ற இடத்தில் கடந்த மாதம் 23ம் தேதி தேனிலவு சென்ற தம்பதியினர் காணாமல் போய்விட்டனர். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மேகாலயா போலீஸார் அத்தம்பதியை தேடி வந்தனர்.

கிடைத்த கணவனின் உடல்..!

மேகாலயா மற்றும் மத்திய பிரதேச போலீஸார் சேர்ந்து அவர்களை தேடி வந்த நிலையில் கடந்த 2ம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் அங்குள்ள பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மனைவியின் உடல் கிடைக்கவில்லை. ராஜாவின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் ட்ரோன் உதவியுடன் போலீஸார் சோனத்தை தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் மட்டும் நின்றது.

சோனத்தையும் கொலையாளிகள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால் இக்கொலையில் திடீர் திருப்பமாக ராஜா ரகுவன்சியின் மனைவி சோனம் இக்கொலை தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நந்த்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை இந்தூர் சிறப்பு விசாரணைக்குழுவினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி இரவோடு இரவாக இக்கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீஸார் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்தனர்.

இக்கொலைக்கான சதித்திட்டத்தை சோனம்தான் தீட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. சோனம் கூலிப்படை அமைத்து இக்கொலையை செய்துள்ளார். கொலை நடந்து 7 நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து மேகாலயா முதல்வர் சங்கா போலீஸாரை பாராட்டி இருக்கிறார். இக்கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா வழிகாட்டி கொடுத்த துப்பு

கொலை செய்யப்பட்ட தொழிலதிபரான ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியை பார்க்க வந்தனர். அவர்கள் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றிப்பார்க்க சென்றனர். அப்படி சென்ற இடத்தில் சிரபுஞ்சியில் உள்ள கிழக்கு காசி மலைப்பகுதிக்கு சென்றனர். அங்கு சென்றபோதுதான் தேனிலவு தம்பதி காணாமல் போகினர். அவர்கள் காணாமல் போய் 10 நாட்கள் கழித்த பிறகுதான் ராஜா ரகுவன்சியின் உடல் ஆழமான மலைப்பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொடுத்த தகவல் இக்கொலையில் துப்பு துலங்க வசதியாக இருந்தது.

இருவரும் காணாமல் போன மே 23ம் தேதி காலை 10 மணிக்கு அவர்கள் அங்குள்ள ஒரு மலையில் 3 ஆயிரம் படிக்கட்டுகள் ஏறி இருக்கின்றனர். அதோடு அவர்களுடன் 3 பேர் இருந்ததை தான் பார்த்ததாக சுற்றுலா வழிகாட்டி தெரிவித்துள்ளார். அவர்கள் மலை படிக்கட்டில் ஏறுவதற்கு தான் உதவி செய்வதாகவும், ஆனால் அவர்கள் வேறு ஒரு சுற்றுலா வழிகாட்டியின் உதவியை நாடியதாகவும் அந்த சுற்றுலா வழிகாட்டி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேனிலவு வந்த தம்பதியுடன் வேறு சிலர் இருந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் பதுங்கி இருந்த சோனம் தனது வீட்டிற்கு நேற்று போன் செய்தார். உடனே சுதாரித்துக்கொண்ட இந்தூர் போலீஸார் காசிப்பூர் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்தே சோனம் போலீஸில் சரணடைந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர். சோனம் கூலிப்படை அமைத்து திட்டமிட்டு தனது கணவனை கொலை செய்து இருப்பதாக மேகாலயா டிஜிபி நான்கிராங் தெரிவித்தார். இக்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்ட... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் புகார்... புதுச்சேரிக்கு தப்பிஓடிய ஆம்பூர் அர்ச்சகர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஒரு திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், தியாகராஜன் மீது திருமணமாகாத 2... மேலும் பார்க்க

`உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ - பெண் ஊழியரிடம் அத்துமீறினாரா சுகாதாரத்துறை அதிகாரி?

திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண் (வயது 39). இவர், திருப்பத்தூரில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!

சதுப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்து... மேலும் பார்க்க

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந... மேலும் பார்க்க

நெல்லை: `சாமக்கொடையில் மண்டையோடு, எலும்புடன் சாமி ஆட்டம்..' பரவிய வீடியோ - 5 பேர் மீது வழக்கு பதிவு

நள்ளிரவில் நடக்கும் சாமக் கொடையின்போது மயானத்துக்குச் சென்று திரும்பிய சாமியாடிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியபடி வந்து சாமியாடிய விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.நெல்லை மாவட்டம் வீரவநல... மேலும் பார்க்க