செய்திகள் :

மேட்டூர் அணையின் கசிவுநீர் துளைகள் சுத்தப்படுத்தும் பணி! 20 ஆண்டுகளுக்குப் பின்!!

post image

சேலம்: மேட்டூர் அணையில் கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடி ஆகும். அணையின் மேல்பகுதியில் 16 அடி அகல சாலை உள்ளது. அணை அடிப்பகுதியில் 4,400 அடி நீளம் கொண்ட கசிவு நீர் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அணையில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் உள்ள சுவர்களில் 281 கசிவு நீர் துளைகள் உள்ளன. அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் அழுத்தத்தால், ஊடுருவும் நீர், கசிவு நீர் துளைகள் வழியே வெளியேறி சுரங்கத்திற்கு செல்லும், தொடர்ந்து சுரங்கத்தின் இரு பகுதிகளிலும் உள்ள சிறு கால்வாய் வழியாக வெளியேறுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு துளைகளில் உள்ள சுண்ணாம்பு படிமங்கள் வெளியேற தொடங்கின. அதனால், வெளியேறும் நீரின் அளவு குறைந்தது.

எனவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு கழிவு நீர் துளைகளில் படிந்த சுண்ணாம்பு படிமங்களை அகற்ற நீர்வளத்துறை முடிவு செய்து தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 20 துளைகளில் படிவம் அகற்றப்பட்டுள்ளது. இப்பணி முடிக்க 6 மாத காலம் ஆகும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ்

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: பால் பொருள்கள் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுமதி!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் நெய் தயாரிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பதி லட்டுக்கு பயன... மேலும் பார்க்க

உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: கமல்ஹாசன்

உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டும் துவக்க விழா நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது: அமைச்சர் சாமிநாதன்

மூன்றாவது மொழியைத் திணிப்பதற்கு மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதாக கோவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். உலக தாய்மொழி தினத்தையொட்டி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் ... மேலும் பார்க்க