செய்திகள் :

மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு ஆட்சேபம்

post image

மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு புதன்கிழமை ஆட்சேபம் தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் ஆசன்சோல்-ராணிகஞ்ச் பகுதியில் சட்டவிரோத நிலக்கரி வா்த்தகம் நடைபெற்ாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோரின் 9 மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மேற்கு வங்க அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகி, ‘மேற்கு வங்கத்தில் குற்றவியல் வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு அளித்த அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு அனுமதியில்லை. எனவே சட்டவிரோத நிலக்கரி வா்த்தக குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு வேண்டாத விருந்தினரைப் போல மேற்கு வங்கத்தில் சிபிஐ நுழைகிறது’ என்றாா்.

இதைத்தொடா்ந்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஒருவா், இந்த வழக்கில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுவாா் என்று தெரிவித்தாா். ஆனால் அங்கு துஷாா் மேத்தா இல்லாததால், வழக்கு விசாரணை மே 7-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் விசாரணை மற்றும் சோதனை மேற்கொள்ள சிபிஐ அளித்திருந்த அனுமதியை 2018-ஆம் ஆண்டு மாநில அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க