செய்திகள் :

மை சிந்தியதால் அடித்த தலைமை ஆசிரியர்; 20 நாள்களாக சிறுமிக்கு சிகிச்சை; செல்வபெருந்தகை கண்டனம்

post image

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கடந்த 20 நாள்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்

"சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மனித நேயத்தையும், கல்வி நிலையங்களின் அடிப்படை ஒழுங்கையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பேனா மை சிந்தியதற்காக ஒரு ஐந்தாம் வகுப்பு சிறுமியை தலையில் அடித்து ரத்தக் கசிவுடன் காயமடைந்து 20 நாட்களாகச் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிய செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.

குழந்தைகள் கல்வி பெறும் இடம் என்றால் அது அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த ஆலயம் ஆக இருக்க வேண்டும்.

ஆனால், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரே இத்தகைய கொடுமையான செயலைச் செய்திருப்பது நம் சமூகத்தின் கல்வி பண்பைக் களங்கப்படுத்துகிறது.

இதுபோன்ற செயல் எவ்விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும். தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும்.

அதேசமயம், கல்வித்துறை அதிகாரிகள் இச்சம்பவத்தை முழுமையாக விசாரித்து, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு கடுமையான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். அந்தச் சிறுமிக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, மனநலம் சார்ந்த ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு, குற்றவாளி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க