செய்திகள் :

மை சிந்தியதால் அடித்த தலைமை ஆசிரியர்; 20 நாள்களாக சிறுமிக்கு சிகிச்சை; செல்வபெருந்தகை கண்டனம்

post image

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கடந்த 20 நாள்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம்

"சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மனித நேயத்தையும், கல்வி நிலையங்களின் அடிப்படை ஒழுங்கையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பேனா மை சிந்தியதற்காக ஒரு ஐந்தாம் வகுப்பு சிறுமியை தலையில் அடித்து ரத்தக் கசிவுடன் காயமடைந்து 20 நாட்களாகச் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிய செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.

குழந்தைகள் கல்வி பெறும் இடம் என்றால் அது அன்பும், நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த ஆலயம் ஆக இருக்க வேண்டும்.

ஆனால், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரே இத்தகைய கொடுமையான செயலைச் செய்திருப்பது நம் சமூகத்தின் கல்வி பண்பைக் களங்கப்படுத்துகிறது.

இதுபோன்ற செயல் எவ்விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும். தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும்.

அதேசமயம், கல்வித்துறை அதிகாரிகள் இச்சம்பவத்தை முழுமையாக விசாரித்து, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு கடுமையான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். அந்தச் சிறுமிக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, மனநலம் சார்ந்த ஆதரவும் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொண்டு, குற்றவாளி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க