செய்திகள் :

மோடியும் ராகுலும் மக்களை பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள்: பிரசாந்த் கிஷோர்

post image

மோடியும் ராகுலும் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிகாரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வகையில், பிகார் முன்னாள் துணை முதல்வரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்கிய அரசியல் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியின் தாயாரை குறிவைத்து சர்ச்சைகுரிய கருத்துகள் பரவலாக பேசப்பட்டதாக பாஜக விடியோ வெளியிட்டு குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இதனைக் குறிப்பிட்டு பிகார் தலைநகர் பாட்னாவில் பேசிய ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், “ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் பிரதமர் மோடியை ஆட்சேபணைக்குரிய விதத்தில் பேசுவார்கள். அதேபோல, பிரதமர் மோடியும் பாஜகவும் திரும்ப இவர்களை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவார்கள். இதன்மூலம், மக்களின் கவனம் உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பப்படுகிறது” என்றார்.

abusive language used during RJD leader Tejashwi Yadav's rally in Bihar: Jan Suraaj founder Prashant Kishor reacts

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் - ராணுவம் இடையே தீவிர சண்டை!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் - ராணுவம் இடையே தீவிர சண்டை இன்று(செப். 21) மூண்டுள்ளது. கிஷ்ட்வார் மாவட்ட வனப்பகுதிகளில் மூண்ட இந்த எண்கவுண்ட்டரில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வ... மேலும் பார்க்க

பிரதமர் உரையில் மக்கள் பெரிதாக எதிர்பார்த்தார்கள்; அப்படியொன்றும் புதிதாகப் பேசவில்லை! -காங்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) மாலை 5 மணியளவில் மக்களுடன் காணொலி வழியாக உரையாற்றினார். அதில், அவர் ஜிஎஸ்டி சீர்திருத்த விவகாரம் வருமான வரியில் தளர்வு உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டிப் பே... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) தெரிவித்தார். சர்வதேச நாடுகளின் பொருள்களுடன் போட்டிபோடும் வகையில் உள்நாட்டுத் தயாரிப்புகள் ... மேலும் பார்க்க

வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி

நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்திய பொருளாதாரத்த... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தல்

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நன்ஹி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் காணாமல் போ... மேலும் பார்க்க

ரூ. 5000 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு நாளை அடிக்கல்!

அருணாசலப் பிரதேசத்தில் ரூ. 5000 கோடி மதிப்புடைய 13 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப். 22) அடிக்கல் நாட்டவுள்ளார்.இதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்தி... மேலும் பார்க்க