செய்திகள் :

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தல்

post image

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் நன்ஹி கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் 4 சிறுமிகள் காணாமல் போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

காணாமல் போன மாணவிகள் 6 அல்லது 7ஆம் வகுப்பு படிப்பவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, பிரிவு 137(2)ன் கீழ் கடத்தல் வழக்கு சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்த ஒருவர் கூறுகையில், 7ஆம் வகுப்பு படிக்கும் அவரது 13 வயது மகள் அரசுப் பள்ளிக்குச் செல்ல வீட்டில் இருந்து கிளம்பினார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

ஆனால் தனது மகள் வீடு திரும்பவில்லை என்றார்.

மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய இரண்டு மாணவிகளும், 7ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவியும் பள்ளிக்குச் செல்லும்போது காணாமல் போனதாக நர்ஹி போலீஸ் அதிகாரி வீரேந்திர சிங் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடியும் ராகுலும் மக்களை பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள்: பிரசாந்த் கிஷோர்

மோடியும் ராகுலும் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.பிகாரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள அரசியல்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 21) தெரிவித்தார். சர்வதேச நாடுகளின் பொருள்களுடன் போட்டிபோடும் வகையில் உள்நாட்டுத் தயாரிப்புகள் ... மேலும் பார்க்க

வருமான வரி, ஜிஎஸ்டியில் சலுகை: பிரதமர் மோடி

நாட்டில் இதுவரை 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். இந்திய பொருளாதாரத்த... மேலும் பார்க்க

ரூ. 5000 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு நாளை அடிக்கல்!

அருணாசலப் பிரதேசத்தில் ரூ. 5000 கோடி மதிப்புடைய 13 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப். 22) அடிக்கல் நாட்டவுள்ளார்.இதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்தி... மேலும் பார்க்க

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் (பனிச்சறுக்கு) சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று இந்திய வீரர் ஆனந்த்குமார் (22) வேல்குமார் இன்று (செப். 21) சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 42 கி.மீ. மாரத்தா... மேலும் பார்க்க

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிமை காலை 6:41 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6ஆகப் ப... மேலும் பார்க்க