செய்திகள் :

ம.பி: `3-வது குழந்தையை காட்டில் வீசிய தம்பதி' - பகீர் பின்னணி; கேள்விக் குறியாகும் அரசின் சட்டம்

post image

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றச் சட்டம் இருக்கிறது.

2000-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் விதிமுறைகள் MP Civil Services Rules, 1961 - ல் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி ஜனவரி 26, 2001க்குப் பிறகு மூன்றாவது குழந்தையைப் பெறும் எந்தவொரு அரசு ஊழியரும் அரசுப் பணிக்குத் தகுதியற்றவர் ஆகிறார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் பப்லு தண்டோலி (38). இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவது குழந்தையை கருத்தரித்தால் பப்லுவின் மனைவி ராஜ்குமாரி.

காவல்துறை
காவல்துறை

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, கர்ப்பத்தை ரகசியமாக வைத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ராஜ்குமாரி பெண் குழந்தையைப் பிரசவித்தார்.

குழந்தை பிறந்த அதே இரவு, தம்பதி மோட்டார் சைக்கிளில் குழந்தையைத் தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் குழந்தையைப் புதைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

அன்று இரவு மழை பெய்ததால் குழந்தையின் முகம் பூமிக்கு மேலே வந்திருக்கிறது. இரவு முழுவதும் பூச்சிக் கடியிலும், மழையிலும் இருந்த குழந்தை மறுநாள் காலை அந்தப் பகுதி கிராமவாசிகளின் கண்ணில் சிக்கியிருக்கிறது.

குழந்தை
குழந்தை

அரசு வேலை பறிக்கப்படும் என்ற அச்சம்

உடனே காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டு, மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் காவல்துறை விசாரணையில், குழந்தையின் பெற்றோர் கைது செய்தப்பட்டிருக்கின்றனர். அரசு வேலை பறிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்கள் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளன. இதுபோன்ற துயரங்களைத் தடுக்க விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப்படைத் தளபதி பதில்

சமீபத்தில் ஸ்டார்லிங்க், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க், வான்வெளி ராணுவத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்துப் பேசியிருந்தார்.மேலும், ராணுவ பைலட்டுகள் ஓட்டும் போர் விமானத்தை விடவும... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: "பொம்பள புள்ளைங்க உடனே போக முடியல" - பெண்கள் கழிவறை இல்லாமல் அவதியுறும் பள்ளி மாணவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சி பூங்குடி கிராமத்தில் 1952ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு அப்பகுதி மக்களின் தொடக்கக் கால கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டு வந்தது.மீண்டும் இப்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு நிரந்தர DGP நியமனம் எப்போது? தொடரும் இழுபறி; UPSC கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்காகக் கடும் போட்டி நிலவும். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க ஆட்சிக்கு வேண்டப்பட்ட ச... மேலும் பார்க்க

ஆதார் கட்டணங்கள் உயர்வு; எந்தெந்த மாற்றங்களுக்கு எவ்வளவு கட்டணம்? - முழுப் பட்டியல்

ஆதார் அட்டை வாங்கும்போது இருந்த அதே முகவரியிலேயே, நாம் இப்போது இருக்க மாட்டோம், அல்லது நமது ஆதார் அட்டையில் ஏதாவது மாற்றங்கள் இருக்கலாம்.இவைகளை UIDAI வலைதளத்திலேயோ அல்லது உதவி மையங்களுக்கோ சென்று சரி ... மேலும் பார்க்க

``முதல் சாட்சி விஜய்தான், நீதி கிடைக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும்'' - பாஜக

விஜய்யின் கரூர் பிரசாரம்கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கார் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி, 32 பேர் படுகாயம்; பின்னணி என்ன?

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் (Frontier Corps - FC) தலைமையகம் அருகே இன்று (செப் 30) கோர கார் வெடிகுண்டு விபத்து நடந்திருக்கிறது.காரில் வெடிகுண்டுகளை நிரப்பி வைத்து வெட... மேலும் பார்க்க