செய்திகள் :

யார் இந்த சைதன்யானந்தா? ஏற்கெனவே தில்லியில் 5 பாலியல் வழக்குகள்!

post image

புது தில்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருக்கும் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது, மாணவிகள் பாலியல் புகார் கூறியிருக்கும் நிலையில், அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது இப்போதுதான் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது போல தகவல்கள் வெளியானது. அவர் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அவர் மீது இதுவரை 5 வழக்குகள் இருப்பதாகவும், அதில் பாலியல் வழக்குகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மாணவிகள் சிலர் வசந்த் கஞ்ச் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பிறகு பிணையில் வெளியே வந்தவர், மீண்டும் அதே நிறுவனத்தில் பணியைத் தொடர்ந்துள்ளார்.

ஏற்கனவே வழக்குகளை சந்தித்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில், தற்போது 17 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்து தலைமறைவாகியிருக்கிறார்.

இவர் போலியான கார் நம்பர் பலகைகளை பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக செப். 26 (நாளை) ஒருநாள் பயணமாக பிகார் செல்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. பிகார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த ... மேலும் பார்க்க

சிப்ஸ் முதல் கப்பல் வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடி

புது தில்லி: இந்திய வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது, இது மிகவும் கவனம் ஈர்க்கும் செயல் என்று கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு இந்தியாவில் தயாரிப்போம், தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கொள்கையை ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்குள் கேஜரிவாலுக்குத் தங்குமிடம் ஒதுக்கப்படும்: தில்லி நீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவாலுக்குப் பொருத்தமான தங்குமிடம் பத்து நாள்களுக்குள் ஒதுக்கப்படும் என மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லியில... மேலும் பார்க்க

தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு! ராகுல் வாக்குறுதி

ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற... மேலும் பார்க்க

பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமை குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 5 நாள்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் ... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை! 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்!

ரயிலில் இருந்து அக்னி - பிரைம் ஏவுகணையை ஏவி இந்திய ராணுவம் புதன்கிழமை இரவு நடத்திய சோதனை வெற்றி அடைந்துள்ளது.இந்த ஏவுகணை, சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடும் என்று மத்திய பா... மேலும் பார்க்க