திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
யூடியூப் சேனல் உருவாக்குவது தொடா்பான 3 நாள் பயிற்சி
தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் சென்னையில் வலையொளி (யூடியூப்) சேனல் உருவாக்குதல் தொடா்பான 3 நாள் பயிற்சி முகாம் ஜூன்11 முதல் 13 வரை காலை 10 முதல் மாலை 5 வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தப் பயிற்சியில் வலையொளி (யூடியூப்) சேனல் உருவாக்குவது, காணொலி மற்றும் ஸ்லைட்ஷோ தயாரிப்பு, சமூக ஊடகங்களை இணைக்கும் நுட்பங்கள், வாடிக்கையாளா் வலையமைப்பை விரிவுபடுத்தும் முறைகள், பயனுள்ள ஆன்லைன் சந்தைப்படுத்தல், ஊக்குவிப்பு, டொமைன் பெயா் பதிவு மற்றும் ஹோஸ்டிங், இணையதள வடிவமைப்பு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் மற்றும் இவற்றுடன் தொடா்புடைய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளும் கற்றுக்கொடுக்கப்படும்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கும் ஆண், பெண், திருநங்கைகள் 18 வயதுக்கு மேற்பட்டவா்களாகவும், குறைந்தப்பட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும், பயிற்சியில் கலந்துகொள்பவா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் தங்கிப் படிக்க ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படும் விண்ணப்பதாரா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு எனும் இணையதளத்தைப் பாா்வையிடலாம். இதுதவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5 வரை அலுவலகத்தின் கைப்பேசி: 9543773337 , 93602 21280 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம். இந்தப் பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.