செய்திகள் :

யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 58 பேர் பலி!

post image

யேமன் நாட்டின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டதுடன், 102-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக இன்று (ஏப்.18) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச்.15 முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆட்சியில் நடத்தப்பட்ட மிகப் பயங்கரமானத் தாக்குதல் எனக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பிலிருந்து எந்தவொரு விரிவானத் தகவலும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

ஆனால், யேமன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தற்போது தீவிரமடைந்துள்ளதையும், அதில் ஏராளமானோர் பலியானதையும் உறுதிப் படுத்தும் விதமாக ஹவுதிகள் வெளியிட்ட விடியோவில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பரவிக்கிடப்பது பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் ஆதரவுப் பெற்ற ஹவுதி கிளர்ச்சிப்படையின் எரிப்பொருள் மூலாதாரத்தை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப்.18) இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில் ஹவுதி படைகள் செல்லுத்திய ஏவுகணைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, யேமனின் கமரதான் தீவின் அருகிலுள்ள ராஸ் இஸா எண்ணெய்த் துறைமுகத்தின் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் அங்கு பணிப்புரிந்த தொழிலாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஒரு வாழைப் பழம் ரூ. 565! விமான நிலையங்களுக்கெல்லாம் ’காட் ஃபாதர்’!

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க