செய்திகள் :

யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

post image

யேமன் நாட்டில் அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

யேமன் தலைநகர் சனாவில் சனிக்கிழமை(மார்ச் 15) நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் 13 பேரும், ஹௌதி படையினர் அதிகளவில் வசித்து வரும் சாதா பகுதியில் 4 குழந்தைகள், ஒரு பெண்மணி உள்பட 11 பேரும் உயிரிழந்தனர்.

செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதலை தொடரப்போவதாக ஹௌதி படையினர் அச்சுறுத்தியுள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாக யேமன் நாட்டில் ஹௌதி படையினர் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வானிலிருந்து குண்டு மழை பொழிந்த நிலையில், குண்டு விழுந்த இடங்களுக்கு அருகிலிருந்த பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தமும் அதிர்வும் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ராணுவத்தின் இந்த தாக்குதலை போர்க்குற்றம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது ஹௌதி நிர்வாகக் குழு. அமெரிக்கவுக்கு பதிலடி தர தங்கள் படையினர் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபின் ஹௌதி படையினர் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும். இந்த நிலையில், ஹௌதி படையினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க போர்க் கப்பல்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீது ஹௌதி படை 174 முறை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹௌதி படையினரை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் ஹௌதி படைக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக நிறுத்திக்கொள்ள டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், ஈரானின் வெளிநாட்டுக் கொள்கைகளில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஈரான் எதிர்வினையாற்றியுள்ளது.

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பை எதிா்கொள்ள ஒருங்கிணைவோம்! -ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் அழைப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பு விடுத்துள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சா்வதேச அளவி... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 3 துணை ராணுவத்தினா் உள்பட ஐவா் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது. பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவா் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிா்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின்... மேலும் பார்க்க

வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா். வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா... மேலும் பார்க்க