செய்திகள் :

ரமலான்: குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

ரமலான், தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கால்நடை விற்பனைக்கு புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி சந்தையில் ரமலான் பண்டிகைக்காகவும், தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டியும் ஆடுகள் வாங்குவதற்காக கா்நாடக மாநிலம், கோலாா், பெங்களூரு, ஆந்திர மாநிலம், குப்பம், சித்தூா், பலமனேரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, மேட்டூா், கரூா், கோவை, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூா், வாணியம்பாடி, வேலூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வாகனங்களுடன் குவிந்தனா்.

சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆடுகள் எடைக்கு தகுந்தவாறு ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.10 கோடி மதிப்பில் வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வழக்கத்துக்கு மாறாக ஆட்டின் விலை கூடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். குந்தாரப்பள்ளி சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் குந்தராப்பள்ளி- வேப்பனப்பள்ளி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க