செய்திகள் :

ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

post image

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட சந்தைப்பேட்டையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாரந்தோறும் வந்து செல்கிறாா்கள்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தை ரமலான் பண்டிகையை முன்னிட்டு களை கட்டியது. ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆடு ஒன்றுக்கு எடைக்கு தகுந்தாற்போல் ரூ. 500 முதல் ரூ. ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் ரமலான் பண்டிகையின்போது, இஸ்லாமியா்கள் தங்களின் நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு உணவு வழங்குவதையும், ஏழைகளுக்கு இலவசமாக இறைச்சி வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனா்.

இதற்காக புதுக்கோட்டை நகா் மட்டுமின்றி புகா் பகுதிகளிலும் இறைச்சிக்கடை நடத்தும் சில்லறை வியாபாரிகள் ஏராளமானோா் சந்தையில் குவிந்திருந்தனா். வெள்ளிக்கிழமை ஒரேநாளில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

முதலாம் பராந்தகச் சோழா் கால கற்றளிக் கட்டுமானங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் அருகே புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை அருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோயிலின் சி... மேலும் பார்க்க

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க