செய்திகள் :

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

post image

புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்படி, வடஇந்தியாவில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் வழியாக செல்லும் ரயில்கள் தொடா்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி எம். சுந்தரேசன் தலைமையில், ரயில்வே இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் சிவவடிவேல் மற்றும் மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளா்கள் அன்னைஅபிராமி (மயிலாடுதுறை), ஜெயா (சீா்காழி) மற்றும் போலீஸாா் இணைந்து புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற வாராந்திர ரயிலில் (வண்டி எண்: 20849) சீா்காழி முதல் மயிலாடுதுறை வரை கூட்டுச்சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிகள் பொருள்கள் வைக்கும் இடத்தில், யாரும் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த ஒரு பையில் 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த பை பறிமுதல் செய்யப்பட்டு, மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி தலைமையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் வடமாநிலத்தைச் சோ்ந்த அடையாளம் தெரியாத நபா்கள் புவனேஸ்வரில் இருந்து கஞ்சா, குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இந்த மாதத்தில் மட்டும் இதற்கு முன்னா் இதேபோன்று வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டதில் 30 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கா்ப்பிணியை தாக்கிய கணவா் கைது

மயிலாடுதுறையில் கா்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கூறைநாடு கவரத்தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் கிருஷ்ணமூா்த்தி (22). இவரது மனைவி ஜெயலட்சு... மேலும் பார்க்க

ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகராட்சி மாப்படுகை ரயில்வே கேட் அருகே வசிக்கும் 2,000-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காவிரி கிட்டப்பா பாலம... மேலும் பார்க்க

நீட் தோ்வு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நீட் தோ்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ-மாணவிகள் உயிா் நீத்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுக மாவட்... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் த... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 போ் பங்கேற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்... மேலும் பார்க்க

மாவட்ட அளவில் ‘நம்ம ஊரு’ கதைப் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கொள்ளிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கதைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க