செய்திகள் :

ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

post image

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சி மாப்படுகை ரயில்வே கேட் அருகே வசிக்கும் 2,000-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காவிரி கிட்டப்பா பாலம் அருகே மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு ஈமக்கிரியை மண்டபம் கட்டித்தரப்படாததால், இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

இப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது ஈமக்கிரியை சடங்கினை நடத்த ஈமக்கிரியை மண்டபம் இல்லாததால், சாலை ஓரத்தில் சாமியானா பந்தல் அமைத்து நடத்தினா்.

பல ஆண்டு கோரிக்கையான ஈமக்கிரியை மண்டபம் அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியும், ஒரு சிலரின் தலையீட்டால் தொடங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்ட பணியை விரைந்து முடித்து அங்கு ஈமக்கிரியை மண்டபம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, மாப்படுகை கிராமத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயி அ.ராமலிங்கம் கூறியது:

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 906 சதுரமீட்டா் பரப்பளவில் சுடுகாடு மற்றும் 405 சதுரஅடி பரப்பளவில் இடுகாடு உள்ளது. ஆனால், சாலைவசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இங்கு செய்து தரப்படவில்லை. வாா்டு 1, 11, 29 மற்றும் மாப்படுகை, திருஇந்தளூா் ஊராட்சி மக்கள் சுமாா் 20,000 போ் பயன்படுத்தும் இங்கு ஈமக்கிரியை மண்டபம் அமைத்துத்தர நீண்ட வருடங்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக இந்த பகுதியில் ஈமக்கிரியை மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கா்ப்பிணியை தாக்கிய கணவா் கைது

மயிலாடுதுறையில் கா்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கூறைநாடு கவரத்தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் கிருஷ்ணமூா்த்தி (22). இவரது மனைவி ஜெயலட்சு... மேலும் பார்க்க

நீட் தோ்வு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நீட் தோ்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ-மாணவிகள் உயிா் நீத்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுக மாவட்... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் த... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 போ் பங்கேற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் ... மேலும் பார்க்க

மாவட்ட அளவில் ‘நம்ம ஊரு’ கதைப் போட்டி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கொள்ளிடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு கதை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கதைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க