செய்திகள் :

ரயில் நிலையங்களில் புரளிகளை நம்ப வேண்டாம்: பயணிகளுக்கு ரயில்வே அறிவுறுத்தல்

post image

ரயில் பயணிகள் புரளிகளை நம்ப வேண்டாமென ரயில்வே நிர்வாகம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 18 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர். இந்த அசம்பாவிதம் நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ரயில்வே அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பயணிகள் யாரும் செவி வழி தகவல்களை உண்மையென நம்பி நடைமேடை விட்டு நடைமேடைக்கு அவசரகதியில் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில்வே தரப்பில் வரும் தகவல்களை கவனமாகக் கேட்டு நடந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகளின் ஒத்துழைப்பை ரயில்வே முழு அளவில் எதிர்பார்க்கிறது. இதன்மூலம், மண்டல ரயில்வே அதிகாரிகளால் திட்டமிட்டபடி ரயில் சேவைகளை இயக்க உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு, புரளிகளை நம்பி அவர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏற முற்பட்டதே முக்கிய காரணமென கூறப்படும் நிலையில், ரயில்வே துறை மேற்கண்ட அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க