செய்திகள் :

ரஷியாவில் கொடூரத் தாக்குதல்! ஈரானிய குழந்தையின் உயிருக்கு ஆபத்து!

post image

ரஷியாவில் ஈரானிய குழந்தையை கொடூரமாக தாக்கியவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாகப் போர் நீடித்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் போர் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், போரின் காரணமாக, ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரஷியாவுக்கு சென்றதாகத் தெரிகிறது. ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த பின், தனது 2 வயது மகனுடன் செல்ல கர்ப்பிணித் தாய் தயாராகிக் கொண்டிருந்தார்.

ஆனால், அந்த சமயத்தில் சிறுவன் அருகே நின்று கொண்டிருந்த ரஷியர் ஒருவர், அந்தப் பகுதியில் யாரும் இல்லை என்பதை கவனித்துவிட்டு, சிறுவனைத் தூக்கி தரையில் பலமாக வீசியுள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலில் சிறுவனின் மண்டை ஓடு எலும்பு முறிந்ததுடன், முதுகுத் தண்டிலும் காயங்கள் ஏற்பட்டன.

சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவரைக் கண்ட விமான நிலைய ஊழியர்கள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மயக்கமடைந்திருந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கோமா நிலைக்கு சென்ற சிறுவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் விளாதிமிர் விட்கோவ் (31) என்பது தெரிய வந்தது. மேலும், சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல் இனவெறி அடிப்படையிலா? வேறு ஏதேனும் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்கோலியாவில் வேகமெடுக்கும் தட்டம்மை பரவல்! 10,000-ஐ கடந்த பாதிப்புகள்!

மங்கோலியா நாட்டில், புதியதாக 232 தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மங்கோலியாவில் கடந்த சில மாதங்களாக தட்டம்மை தொற்று ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சுற்றுலாத் தலத்தில் திடீர் வெள்ளம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தலைதூக்கும் போலியோ? அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு துவங்கியது முதல் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில்... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?

உக்ரைனுடான போரில் ரஷியாவுக்கு கூடுதல் படைகளை வட கொரியா வழங்கவிருப்பதாக தென் கொரியா எச்சரித்துள்ளது.ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும்நிலையில், இதுவரையில் போரின... மேலும் பார்க்க

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்

அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

மத்திய ஆப்பிரிக்க குடியரசு: வெடிவிபத்து, நெரிசலில் 29 மாணவா்கள் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகா் பாங்கியில் உள்ள ஓா் உயா்நிலைப் பள்ளியில் வெடிவிபத்து மற்றும் அதைத் தொடா்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக 29 மாணவா்கள் உயிரிழந்தனா்; சுமாா் 260 போ் காயமடைந்தனா்.இது கு... மேலும் பார்க்க