செய்திகள் :

``ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது'' - தேர்தல் ஆணையம் பதில்

post image

மகாராஷ்டிராவில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த முறைகேடுகளுக்குத் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாக பகிரங்கக் குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறார்.

ராகுல் காந்தி | Operation Sindoor
ராகுல் காந்தி | Operation Sindoor

தற்போது பீகாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, "2024 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்தே வென்றது. இதே உத்தியை பீகார் தேர்தலிலும் பின்பற்ற பாஜக திட்டம் வகுத்துவிட்டது. இம்முறையும் மேட்ச் ஃபிக்ஸிங் நடக்கும்" என்று பாஜக மீதும் தேர்தல் ஆணையம் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம், "இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. அடிப்படை ஆதாரமற்றது. தேர்தல்களின்போது அயராது பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களை அவமதிக்கும் செயல் இது. சட்டத்தின் ஆட்சிக்கும் இது பெரும் அவமானம் சேர்க்கும்.

தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணுதல் உள்ளிட்ட ஒவ்வொரு தேர்தல் செயல்முறையும் அரசு ஊழியர்களால் நடத்தப்படுகிறது. அதுவும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுவது நாட்டுகே தெரிந்த வெளிப்படையான உண்மை.

வாக்காளர்கள் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்காத தேர்தல்களுக்குப் பின்னர், தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளதாகக் கூறி அவதூறு பரப்ப முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது" என்று ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

One Day DC: 'என் வாழ்வில் மறக்கமாட்டேன்'- ஒரு நாள் துணை ஆணையராகப் பதவி வகித்த 10-ம் வகுப்பு மாணவி

ஒரு நாள் முதல்வர் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், 10-ம் வகுப்பு மாணவி ஒரு நாள் துணை ஆணையராக பதவி வகித்த கதையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியான ஒரு நிகழ்வு ஹிமாச்சலப் பிரத... மேலும் பார்க்க

Bengaluru Stampede: ``மகனுக்காக நான் வாங்கிய இடத்திலேயே அவனது கல்லறை..'' - தந்தையின் சோகக் குரல்

ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் கோப்பையை வென்றதற்கு,கடந்த ஜூன் மாலை ஆர்.சி.பி வீரர்களை நேரில் அழைத்து சிறப்பிக்க அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டி... மேலும் பார்க்க

Manipur: மணிப்பூரில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்; இணைய சேவைகள் முடக்கம் - என்ன நடக்கிறது?

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்து... மேலும் பார்க்க

உப்பை உண்டு, புனித நூல்கள் மீது சத்திய பிரமாணம்! - எல்லைகளைப் பாதுகாக்க கிளம்பும் 500 அக்னி வீரர்கள்

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி முகாம்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து மெட்ராஸ் ரெஜிமென்ட் ... மேலும் பார்க்க

Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திறப்பு -| Top Facts

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்று பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார். எதற்காக? ஜம்மு & காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலம் 'செனாப் பாலம்'... மேலும் பார்க்க

ஜூன் 6 பொது விடுமுறையா? பரவும் பொய் தகவல்கள்; உண்மையில் பக்ரீத் விடுமுறை எப்போது?

வெள்ளிக் கிழமை, ஜூன் 6 அரசு விடுமுறையா? இணையத்தில் பலர் நாளை விடுமுறை என்றும், நாடுமுழுவதும் அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிகள் கூட மூடப்படும் என்றும் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுகளால் பலரும் ... மேலும் பார்க்க