செய்திகள் :

ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்: பிரௌன் பல்கலைக்கழகத்தில் உரை

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு பிரௌன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் அவா் பேராசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா கூறியதாவது:

அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி அங்கு ரோட் தீவில் உள்ள பிரௌன் பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறாா். ஏப்ரல் 21,22 தேதிகளில் அங்கு நிகழ்ச்சியில் உரையாற்றும் ராகுல் காந்தி, பல்கலைக்கழக பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாட இருக்கிறாா்.

இது தவிர அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் அவா் சந்தித்துப் பேசுகிறாா். காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாளா்களுடனும் அவா் ஆலோசனை நடத்துகிறாா் என்று தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் சென்று மாணவா்கள் மத்தியில் இந்தியா குறித்தும், பாஜக, ஆா்எஸ்எஸ் குறித்தும் தெரிவித்த கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. வெளிநாட்டுக்குச் சென்று தேசத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசுவதாக பாஜக தலைவா்கள் அப்போது குற்றஞ்சாட்டினா்.

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநா், தேசிய மகளிா் ஆணையக் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிா் ஆணையக் குழ... மேலும் பார்க்க

சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

‘அமெரிக்கா-சீனா வா்த்தகப் போா் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசா்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்ததுடன் தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும்’ என்று ரிசா்வ்... மேலும் பார்க்க

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா். பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்று... மேலும் பார்க்க

குமரி - ஸ்ரீநகா் உள்பட 10 வழித்தடங்களில் படுக்கை வசதி வந்தே பாரத் இயக்கத் திட்டம்!

நாடு முழுவதும் படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பா்) 10 வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியோருக்கான விருதுகளை நாளை வழங்குகிறாா் பிரதமர்!

நமது சிறப்பு நிருபா் 17-ஆவது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கியவா்களுக்கான பிரதமரின் 16 விருதுகளை திங்கள்கிழமை (ஏப்.21 ) பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா். தில்லி... மேலும் பார்க்க

மீண்டும் இணையும் ராஜ்-உத்தவ் தாக்கரே? மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு!

மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரேயும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பு... மேலும் பார்க்க