செய்திகள் :

ராகுல் - சித்தராமையா சந்திப்பில் பேசியது என்ன?

post image

கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விவாதித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் இன்று(செவ்வாய்க்கிழமை) சந்தித்துப் பேசினர்.

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு முதல்வரும் துணை முதல்வரும் விளக்கமளித்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்தில் பேசியது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் - மாநில பொறுப்பாளர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். வருகிற ஜூன் 12 ஆம் தேதி கர்நாடக சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பில் கர்நாடக அரசு செய்தவற்றை கொள்கையளவில் ஒப்புக்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால், தரவுகள் குறித்து ஒரு சில சமூகத்தினருக்கு அச்சம் இருக்கிறது. அதனால் கர்நாடக அரசு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.

கர்நாடகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்தும் மாநில அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் தலைமைக்கு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விளக்கமளித்தார்.

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு கர்நாடகத்தை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. மோடி அரசு கர்நாடக மாநிலத்திற்கு அநீதி இழைக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

என் வாழ்க்கையின் மோசமான நாள்: ஏர் இந்தியா தலைவர்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.அதில், தனது தொழில் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்... மேலும் பார்க்க

புறப்பட்ட ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! வெளியானது சிசிடிவி காட்சி!

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேர... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

தேனிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை முன்பே திட்டமிட்டதை அவரது மனைவி சோனம் ஒப்புக்கொண்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான மூளையாக சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா செயல்பட்டதாகவும்,... மேலும் பார்க்க

ஆமதாபாத்: சிதைந்த நிலையில் பயணிகள்; உறவினர்களிடம் ’டிஎன்ஏ மாதிரி’ கோரும் குஜராத் அரசு!

குஜராத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ர... மேலும் பார்க்க