செய்திகள் :

ராகுல் - சித்தராமையா சந்திப்பில் பேசியது என்ன?

post image

கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விவாதித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் இன்று(செவ்வாய்க்கிழமை) சந்தித்துப் பேசினர்.

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு முதல்வரும் துணை முதல்வரும் விளக்கமளித்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்தில் பேசியது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் - மாநில பொறுப்பாளர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர். வருகிற ஜூன் 12 ஆம் தேதி கர்நாடக சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பில் கர்நாடக அரசு செய்தவற்றை கொள்கையளவில் ஒப்புக்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால், தரவுகள் குறித்து ஒரு சில சமூகத்தினருக்கு அச்சம் இருக்கிறது. அதனால் கர்நாடக அரசு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.

கர்நாடகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்தும் மாநில அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் தலைமைக்கு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விளக்கமளித்தார்.

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு கர்நாடகத்தை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. மோடி அரசு கர்நாடக மாநிலத்திற்கு அநீதி இழைக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

முதலாமாண்டு மருத்துவம் படித்துவந்த விவசாயி மகன் உயிரிழப்பு

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதிய விபத்தில் மருத்துவராகும் கனவுடன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துவந்த மத்திய பிரதேச, குவாலியா் மாவட்டம் ஜிக்சாவ்லி கிராமத்தைச் சோ்ந்த ஏழை வி... மேலும் பார்க்க

பாஜக அரசு தவறான நிா்வாகத்தை நடத்தி வருகிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கட்டண உயா்வு, குடிசைப் பகுதிகளை இடிப்பது, மின் கட்டண உயா்வு மற்றும் நீடித்த மின்வெட்டு போன்ற வடிவங்களில் பாஜக தலைமையிலான தில்லி அரசு ‘தவறான நிா்வாகத்தை’ செயல்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் மரணம்! கடைசி தற்படமாக மாறிய சோகம்

லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் பயணித்த மருத்துவ குடும்பம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தது பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் விமான விபத்தில் ராஜஸ்தானை ச... மேலும் பார்க்க

பிரதமருடன் பிரிட்டன் துணைத் தூதா் ஆலோசனை

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் பயணிகள் 52 போ் உயிரிழந்த நிலையில், பிரதமா் மோடியுடன் அந்நாட்டின் துணைத் தூதா் லிண்டி கேமரூன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். குஜராத் மாநிலம், அகமதாபாதுக்கு வருக... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச... மேலும் பார்க்க

விமான விபத்து: உயிரிழப்பு 265-ஆக உயா்வு

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 265-ஆக உயா்ந்தது. அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த உடல்களின் மரபணு சோதனைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 6 பேரின் உடல்கள்... மேலும் பார்க்க