செய்திகள் :

ராஜஸ்தானில் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்!

post image

ராஜஸ்தானில் இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகம் முன்பாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் அவினாஷ் கெலாட்டுக்கு எதிராக, ராஜஸ்தான் சட்டபேரவையில் கடந்த பிப். 21 ஆம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 6 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் அறிவித்தார். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்று கூறினார். அன்று இரவு முழுவதும் 6 எம்எல்ஏக்களும் பேரவை வளாகத்திலேயே தங்கியுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று அவர்கள் சட்டப்பேரவை வளாகம் முன்பாக இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?

இன்று காலை சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழைந்த இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் அவை நடைபெறும் பகுதிக்கு வெளியே இருப்பார்கள் என்று அவைத்தலைவர் பதிவில் இருப்பதாகவும் ஆனால் தற்போது எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் இந்த உத்தரவு அவைத் தலைவரின் அறிக்கைக்கு எதிரானது ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.

நாங்கள் நினைத்தால் பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றும் இடைநீக்கம் செய்யப்படாத எம்எல்ஏக்களும் பேரவை வாயிலில் நிறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க