செய்திகள் :

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

post image

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

தேனிலவுக்கான முழு ஏற்பாட்டையும் செய்த மனைவி சோனம், தனது காதலுடன் இணைந்து மேகாலயாவில் வைத்து கணவரைக் கொலை செய்தார்.

காவல்துறையின் விசாரணையில் ராஜா ரகுவன்ஷியை, சோனம் மற்றும் அவரது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் இணைந்து 3 இளைஞர்கள் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜாவுக்கு சோனம் மாந்திரீகம்

”ராஜா ரகுவன்ஷிக்கு சோனம் மாந்திரீகம் செய்து வைத்ததாக அவரின் தந்தை அசோக் ரகுவன்ஷி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “திருமணமானவுடன் ஒரு முடிச்சை ராஜாவுடன் கொடுத்து வீட்டின் முன்பகுதியில் சோனம் கட்டவைத்தார். வீட்டில் தீய சக்தி அண்டாமல் இருக்க என்று சோனம் தெரிவித்திருந்தார்.

ஆனால், ராஜாவின் கொலைக்கு பிறகு அது எனது மகனுக்கு வைக்கப்பட்ட மாந்திரீகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

தற்போது அந்த முடிச்சு வீட்டின் முன்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜா ரகுவன்ஷியின் தாயார் உமா கூறுகையில், தனது மகன் மற்றும் சோனம் ஜாதகம் செவ்வாய் கிரகத்துடன் ஒத்துப்போனதால் ஜோதிடர் பரிந்துரைத்தபடி, பாரம்பரிய முறையில் திருமணம் நடத்தப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு நான்கு நாள்கள் மட்டுமே சோனம் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். பிறகு முறைப்படி, அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றார். மகிழ்ச்சியுடன் அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.

சோனத்தை எப்போதாவது சந்தித்தால், என் மகனைக் கொன்றது ஏன்? என்ற கேள்வியை மட்டும் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வாக்குமூலம்

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் குறித்து மேகாலயா காவல்துறையினர் வெளியிட்ட தகவலில்,

”இந்த ஒட்டுமொத்தக் கொலைக்கும் பின்னணியில் மூளையாக இருந்தது ராஜ் குஷ்வாஹா என்றும், இந்த கொலைத் திட்டம் இந்தூரில் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷி - சோனம் திருமணத்துக்கு முன்பே கொலைத் திட்டம் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே போட்ட மூன்று திட்டங்கள் கொலையில் முடியாமல், நான்காவது திட்டம்தான் நிறைவேறியதாக குற்றவாளிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, திருமணம் மே மாதம் நடைபெற்ற நிலையில், கொலைத் திட்டம் பிப்ரவரி மாதமே தீட்டப்பட்டிருந்ததும், ஒன்று, ஆற்றில் சோனம் அடித்துச் செல்லப்பட்டதாக நாடகமாடுவது அல்லது, ஒரு பெண்ணைக் கொன்று எரித்துவிட்டு சோனம் என நாடகமாடுவது என்ற திட்டங்களும் கொலைச் சதியில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?

கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் கைது!

ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 163 உடல்கள் அடையாளம் காணப்பட்டன; 124 உடல்கள் ஒப்படைப்பு

அகமதாபாத் விமான விபத்தில் சிக்கியவர்களில் 163 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றில், 124 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விமான விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகு... மேலும் பார்க்க

6 சர்வதேச விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் இன்று 6 விமானங்களை ரத்து செய்துள்ளது. அமிர்தசரஸ் - லண்டன், தில்லி - துபை இடையே இயக்கப்படும் சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் வ... மேலும் பார்க்க

சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை: ரூ.160 கோடி சொத்துகள் முடக்கம்

மும்பை: சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.160 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதா... மேலும் பார்க்க

மேலும் 2 விமானங்கள் இன்று ரத்து: ஏர் இந்தியா

புது தில்லி: தில்லியிலிருந்து பாரீ்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் ஏஐ143 விமானம் இன்று(ஜூன் 17) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து போயிங் ... மேலும் பார்க்க

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு, மாநில விமானப் ப... மேலும் பார்க்க