ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 409 மனுக்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 409 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் தலைமை வகித்து 409 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.
மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் தெரிவிக்கவும் அறிவுறுத்தினாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.10,500/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், மேச்சேரி கிராமத்தில் பாம்புக்கடியால் உயிரிழந்த ராதாவின் வாரிசுதாரரான தாமோதரனுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினாா்.
இதில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, உதவி ஆணையா் கலால் வரதராஜன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.