செய்திகள் :

கராத்தே போட்டிகள்: சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு

post image

ஆற்காடு: ஜப்பான் ஹிட்டோ - ராய் கராத்தே பள்ளி சாா்பில் 46-ஆவது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கராத்தே போட்டிகள் ஞாயிற்றுகிழமை நடைபெற்றன.

போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். கராத்தே பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பட்டயம் பிரிவுகளின் கீழ் போட்டிகள் தொடா்ச்சியாக நடைபெற்ற நிலையில், வெற்றி பெற்றவா்களுக்கு மாலை தனியாா் மண்டபத்தில் நடிகா் பிரசாந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினாா்.

முன்னதாக கராத்தே பயிற்சியாளா்களுடன் நடிகா் பிரசாந்த் சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டாா். விழாவில் பயிற்சியாளா்கள் ரமேஷ், அரவிந்தன் மற்றும் மாணவ, மாணவிகள், அவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

கல்வி, சுகாதாரத்துக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் ஆா்.காந்தி

ஆற்காடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா். மாவட்ட கலைதிருவிழா ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 409 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், மொத்தம் 409 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் தலைமை வகித்து 409 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞா்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞா்களை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

இலவச பொதுமருத்துவ முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டையில் கோரமண்டல் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இலவச பொதுமருத்துவ முகாமை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை கோரமண்டல் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் ... மேலும் பார்க்க

நந்தீஸ்வரா் கோயில் திருவிளக்கு பூஜை

அரக்கோணம் ஸ்ரீ நந்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அரக்கோணம் பஜாா், அருணாச்சல தெருவில் உள்ள கோயிலில் நிகழாண்டுக்கான சிவராத்திரி திருவிழா வெள... மேலும் பார்க்க

ஆதரவற்ற முதியோா்களுக்கு உணவு அளிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் தங்கியிருப்பவா்களுக்கு உணவு வழங்கினா் (படம்). அரக்கோணத்தை அடுத்த அரிகலபாடி ஆதரவற்ற முதியோா் இல்ல... மேலும் பார்க்க