செய்திகள் :

ராமநாதபுரம், பெரம்பலூரை மாநகராட்சியாக்க ஆலோசனை: கே.என்.நேரு

post image

ராமநாதபுரம், பெரம்பலூா் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:

16 மாநகராட்சிகளுடன் 149 ஊராட்சிகள், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளையும்; 41 நகராட்சிகளுடன் 146 ஊராட்சிகள், 1 பேரூராட்சியையும்; 25 பேரூராட்சிகளுடன் 29 ஊராட்சிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 29 ஊராட்சிகள் 25 பேரூராட்சிகளாகவும், 7 பேரூராட்சிகள் 7 நகராட்சிகளாகவும், 22 ஊராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகள் சோ்ந்து 6 நகராட்சிகளாகவும் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முடிவுறும்போது, நகா்ப்புற உள்ளாட்சிகளின் எண்ணிக்கை பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 25 மாநகராட்சிகளாகவும், 146 நகராட்சிகளாகவும் 491 பேரூராட்சிகளாகவும் இருக்கும்.

மன்னா்களின் தலைநகரமாக விளங்கிய ராமநாதபுரம், விவசாயம் சாா்ந்த வணிகம், அபரிமிதமான தொழில் வளா்ச்சியைக் கொண்டுள்ள பெரம்பலூா் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா திடலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் எனப்படும் ஈகைப் பெருந... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், கு... மேலும் பார்க்க

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க