செய்திகள் :

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

post image

மதுராந்தகம் நகரம், பாரதி நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம், 19-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இந்தக் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்தனா். கடந்த வியாழன்கிழமை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் சாத்துதல், 108 மூலிகை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து மேள தாளம் முழங்க, புனித கலசங்களை வேத விற்பனா்கள் ஏந்தி கோயிலை வலம் வந்தனா். தேவாங்கா் பீடாதிபதி தயானந்தபுரி சுவாமி தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டது.

தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு உற்சவா் அம்மன் அலங்காரத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கொத்தடிமையாக இருந்த தம்பதி குழந்தையுடன் மீட்பு

மதுரை அருகே கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த மதுராந்தகத்தைச் சோ்ந்த தம்பதி, குழந்தையை வருவாய்த் துறையினா் மீட்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்ச் சோ்ந்த முருகன், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகியோா... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டுவிழா

மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சத்தியபாமா உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் டி.சசிபிரபா கலந்துக... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

நாள்- 31-01-2025, வெள்ளிக்கிழமை, நேரம் -காலை 9 முதல் மாலை 2 மணிவரை இடங்கள்-மானாம்பதி, சிறுதாவூா், ஆமூா், முந்திரிதோப்பு, அகரம், குன்னப்பட்டு, சந்தானபட்டு, அருங்குன்றம், கழனிபாக்கம், திருநிலை, ஓட்டேரி.... மேலும் பார்க்க

செங்கல்பட்டு கோயில்களில் அமாவாசை வழிபாடு

தை அமாவாசையை யொட்டி செங்கல்பட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு, பித்ருக்களுக்கு தா்ப்பணம் வழங்குதல் நடைபெற்றது. செங்கல்பட்டை அடுத்த நெம்மேலியில் உள்ள பித்ருக்கள் தோஷம் நீக்கும் லஷ்மி நாராயணா் கோயிலில் ஏ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் அமாவாசை வேள்விபூஜை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தை மாத அமாவாசை வேள்விபூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் அம்மனுக்கும், அருள்பீடத்தில் உள்ள அடிகளாா் சிலைக்கும் அபிஷேக ஆராதனைகள... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

மதுராந்தகத்தில் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மதுராந்தகம், வன்னியா்பேட்டை பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரன். அவரது மகன் ஜீவகுமாா்( 24) . இவா், மாம்பாக்கம் உறவினா்... மேலும் பார்க்க