செய்திகள் :

ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து: ஏப். 6-இல் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்

post image

பாம்பன் புதிய ரயில்வே பாலம் வழியாக வரும் ஏப். 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 1914-ஆம் ஆண்டு பாம்பன் கடலில் கப்பல், ரயில் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் பாம்பன் ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, ரயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி, தற்போது நிறைவடைந்தது. மேலும், ரூ. 90 கோடியில் ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள், பாம்பன் புதிய ரயில்வே பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக சிறப்பு ரயில் மூலம் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் புதன்கிழமை ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்தாா்.

இதைத் தொடா்ந்து, ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, கட்டுமான நிறுவனத்திடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.என். சிங் கூறியதாவது:

தாம்பரம்-ராமேசுவரம் முதல் பயணிகள் ரயில் போக்குவரத்தை வரும் ஏப். 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா். பாம்பன் புதிய ரயில்வே பாலம் வழியாக இந்த ரயில் போக்குவரத்து நடைபெறுவதால், இதற்கான பணிகளை ஆய்வு செய்ய வந்தேன்.

தனுஷ்கோடி வரையிலான ரயில் போக்குவரத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை மாநில அரசு தான் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, காா் மூலம் ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் சென்று அவா் பாா்வையிட்டாா்.

பின்னா், பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து புதிய ரயில்வே பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீ வஸ்தவா, ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. ஈஸ்வர ராவ், அதிகாரிகள் உடனிருந்தனா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 5 லட்சம் கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பண்டல்களை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபு... மேலும் பார்க்க

குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் நகைகள் திருட்டு

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் பேருந்தில் ஓட்... மேலும் பார்க்க

தொண்டி அருகே மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை உயிருடன் மீட்பு

திருவாடானை அருகே தொண்டியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் மீனவா் விக்னேஷ்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 300 போ் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300-க்... மேலும் பார்க்க

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

திருவாடானை அருகே காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆ... மேலும் பார்க்க