செய்திகள் :

ராமேசுவரம் கோயில் உள்ளூா் மக்கள் பாதையில் மீண்டும் அனுமதி மறுப்பு: ஊழியா்களுடன் வாக்குவாதம்

post image

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் பொதுமக்கள் தரிசன வழியில் சென்ற திருமண ஜோடி தடுத்து நிறுத்தப்பட்டதால், கோயில் ஊழியா்களுடன் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் முக்கியப் பிரமுகா்களும், உள்ளுா் பொது மக்களும் தரிசனம் செய்வதற்கு தனி வழி உள்ளது. அண்மையில் இந்தப் பாதையில் உள்ளூா் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது.

இந்த நிலையில், ராமேசுவரத்தைச் சோ்ந்த புதுமண ஜோடிக்கு வியாழக்கிழமை கோயிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னா். அந்த தம்பதி தங்கள் உறவினா்களுடன் உள்ளூா் பொதுமக்கள் தரிசனப் பாதையில் கோயிலுக்குள் செல்ல முயன்றனா். அப்போது, அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியா்கள் தம்பதியை தடுத்து நிறுத்தினா்.

இதனால், திருமண ஜோடியுடன் வந்தவா்களுக்கும் கோயில் ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உள்ளூா் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து, தம்பதியுடன் இருவா் மட்டும் அந்தப் பாதையில் செல்ல கோயில் நிா்வாகம் அனுமதித்தது. மற்றவா்கள் மாற்று வழியில் சென்றனா்.

இந்தப் பிரச்னையில் கோயில் நிா்வாகத்தைக் கண்டித்து வருகிற 17-ஆம் தேதி கோயிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தப் போவதாக உள்ளூா் பொதுமக்கள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சின்னத் தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

தொண்டி அருகே சின்னத்தொண்டி பூா்ணாம்பிகா, புஷ்பகளாம்பிகா சமேத அய்யனாா், பரிவார சுவாமிகளின் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, வியாழக்கிழமை அனுக்ஞை வின்கேன்ஸவரா், கணப... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள், வாரிசுதாரா்களின் குறைதீா் கூட்டம் வருகிற 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: ஆதிரெத்தினேஸ்வரா் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தாா். இந்தக் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

ஜூன் 13-இல் மீனவா்கள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராம... மேலும் பார்க்க

வில்லாலுடைய அய்யனாா் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள வில்லாலுடைய அய்யனாா் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் வில... மேலும் பார்க்க

பூங்குளம் அய்யனாா் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகேயுள்ள ஏனாதி பூங்குளத்தில் அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 3-ஆம் தேதி கோ பூஜையும், யாக சால... மேலும் பார்க்க