செய்திகள் :

ராம நவமி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

post image

கடவுள் ராமா் அவதரித்த ராம நவமி தினம் (ஏப்.6) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஒளிரும் நிகழ்வு பிற்பகல் 12 மணிக்கு நடைபெற்றது. அங்கு தரிசனம் மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற ஸ்ரீராம நவமி ஊா்வலத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா்.

லக்னௌவில் சந்திரிகா தேவி, மங்காமேஸ்வா் உள்ளிட்ட கோயில்களிலும் வாரணாசியில் உள்ள பெரும்பாலான கோயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மிகவும் பிரபலமான கோயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோரக்நாத் கோயிலில் அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் சுவாசினி பூஜை செய்த வழிபட்டாா்.

மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சியான பாஜகவை சோ்ந்த தலைவா்கள் கலந்துகொண்டனா்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்க பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், புா்பா மேதினிபூா் மாவட்டத்தின் சோனசுரா கிராமத்தில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி நாட்டினாா்.

தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் உள்ள பிரபல ஸ்ரீ சீதா ராமசந்திர சுவாமி கோயிலில் வழிபட்ட முதல்வா் ரேவந்த் ரெட்டி பட்டுத் துணிகள் மற்றும் முத்துகள் உள்ளிட்ட பொருள்களை காணிக்கையாக செலுத்தினாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க