செய்திகள் :

ரீல்ஸ் பார்த்து ஆபத்தை உணராமல் அணைகளில் குவிந்த மக்கள்! -துரித நடவடிக்கை எடுத்த புதுச்சேரி ஆட்சியர்

post image

வடகிழக்கு பருவமழையால் புதுச்சேரியிலுள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதேபோல விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வீடூர் அணை அதன் மொத்தக் கொள்ளளவான 32 அடியை எட்டியதால், அதன் உபரி நீரை வெளியேற்றினர்.

அதனால் புதுச்சேரியிலுள்ள கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு மற்றும் கைக்கிளப்பட்டு படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. அதையடுத்து தங்களை இன்ஃப்ளூயன்சர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், அந்த படுகை அணையை வீடியோ எடுத்து, `புதுச்சேரியில் குளிப்பதற்கு இப்படி ஒரு இடம் இருக்கிறதா… இப்படி ஒரு அணையா… இப்படி ஒரு சுற்றுலாத்தலமா…’ என்று சமூக வலைத்தளங்களில் ஹைப் கொடுத்து வருகிறார்கள்.

தடுப்பணைகளில் போலீஸார் பாதுகாப்பு

அதனால் குழந்தைகளுடன் அங்கு படையெடுக்கும் பொதுமக்கள் அதில் சாவகாசமாக குளித்து வருகிறார்கள். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் படுகை அணை என்பது குளிப்பதற்கான இடம் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், கிராமத்து சூழலில் இருப்பவர்கள் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளையும், அவற்றைக் கடக்கும் நீரின் போக்கையும் ஓரளவு அறிந்திருப்பார்கள்.

பல நேரங்களில் நீச்சல் தெரிந்திருந்தாலும் அவர்களே வெள்ளத்தில் சிக்கிக் கொள்வது உண்டு. அப்படியான சூழலில் நீச்சல் தெரியாத, நீர் நிலைகள் குறித்த புரிதல் சிறிது கூட இல்லாத மக்கள், கூட்டம் கூட்டமாக சென்று குளிப்பது, சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இத்தனைக்கும் `வீடூர் அணை திறக்கப்பட்டிருப்பதால் சங்கராபரணி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது’ என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் விடுத்த எச்சரிக்கையை பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த 2021-ம் ஆண்டு பெய்த பருவ மழையில் சங்கராபரணி ஆற்றின் செல்லிப்பட்டு தடுப்பணையில் தனது பெற்றோருடன் குளிக்கச் சென்ற சபியுல்லா என்ற 12 வயது சிறுவன், ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

அதேபோல கடந்த 2024-ம் ஆண்டு தன்னுடைய பெற்றோர்களுடன் குளிக்கச் சென்ற லியோ ஆதித்யன் என்ற 16 வயது சிறுவன், நீரில் அடித்துச் செல்லப்பட்டான். அதன்பிறகு காவல் மற்றும் தீயணைப்புத் துறையினரின் தீவிர தேடுதலால், நான்கு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன்

இப்படியான சூழலில்தான் படுகை அணைகளை குற்றால அருவி போல வர்ணித்து ரீல்ஸ் போடும் இன்ஃப்ளூயன்சர்கள் கொடுக்கும் ஹைப்களால், மக்கள் குடும்பத்துடன் அங்கு படையெடுத்தனர். அதனால் ஆபத்தை உணராமல் தடுப்பணைகளில் மக்கள் குளிப்பது குறித்து, ஜூ.வி சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.

அதனடிப்படையில் உடனே களத்தில் இறங்கிய ஆட்சியர், போலீஸார் மூலம் படுகை அணைகளுக்குச் செல்லும் வழிகளில் பேரிகார்டுகள் அமைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

அத்துடன் சங்கராபரணி ஆறு மற்றும் படுகை அணைகளில் பொதுமக்கள் இறங்காதவாறு போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார். ஆட்சியரின் துரித நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க

குருபூஜை: "எடப்பாடிதான் எங்கள் எதிரி" - செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்... மேலும் பார்க்க