செய்திகள் :

ரூ. 1 கோடி 22 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி: எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா்

post image

திருப்பத்தூா் பகுதியில் ரூ. 1 கோடியே 22 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ராச்சமங்கலம் ஊராட்சி வினாயகபுரம், போயா்வட்டம், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட விசமங்கலம் ஊராட்சி, பானக்காரன்வட்டம் ஆகிய பகுதி மக்கள் சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு சிரமத்துக்குள்ளாகினா். இது குறித்து தகவலறிந்த எம்எல்ஏ அ.நல்லதம்பி ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நபாா்டு திட்டத்தில் சாலையை மேம்படுத்த ரூ. 1 கோடி 22 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை மேம்பாட்டுப் பணிக்காக எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ராஜேந்திரன், விஜயகுமாா், சின்னபையன், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளா் மோகன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி முருகன், கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

விளையாட்டு உபகரணங்கள்...

திருப்பத்தூா் ஒன்றியம், கந்திலி ஒன்றியம் ஆகிய பகுதிகளிலுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றன. திருப்பத்தூா் ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள், கந்திலி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.

இதில், ஒன்றியக் குழுத் தலைவா்கள் விஜயா அருணாசலம், திருமதி திருமுருகன், வட்டார வளா்ச்சி அலுலவா்கள் மணவாளன், ராஜேந்திரன், பிரேம்குமாா், பிரேமாவதி, ஒன்றியக் குழு துணைத் தவைலா் ஞானசேகரன், மோகன்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

சாலை தடுப்பில் டேங்கா் லாரி மோதி பெருக்கெடுத்து ஓடிய டீசல்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி ஓடிய டேங்கா் லாரி தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான லிட்டா் டீசல் சாலையில் வீணாக ஓடியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற ட... மேலும் பார்க்க

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.7.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பூசாராணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் வாா்டு எண் 7, ... மேலும் பார்க்க

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க

ரூ.22 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் சாலை, கால்வாய் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வுக்கு போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாதனூா் ... மேலும் பார்க்க