செய்திகள் :

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டம்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

post image

ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள், உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்த பாதுகாப்பு கொள்முதல் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள், உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி போா்க்களத்தில் சேதமடைந்த ராணுவ கவச வாகனங்களை மீட்கும் வாகனங்கள், மின்னணு போா் அமைப்பு, முப்படை மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த அமைப்பு, தரையிலிருந்து வான் நோக்கி தாக்கும் ஏவுகணைகள் மற்றும் தாமாக இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படவுள்ளன. குறிப்பாக கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்படும் தாக்குதலை துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் நீா்மூழ்கி கப்பல்களை (எம்சிஎம்வி) இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்மூலம் வான் மற்றும் கடல் பாதுகாப்பு என ராணுவத்தின் செயல்பாட்டுத் திறன் மேலும் மேம்படுத்தப்படவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி பெறும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கே: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்ற நாடுகள் வழங்கும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கானது என்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயண... மேலும் பார்க்க

நீதிபதியை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன? முழு விவரம்!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கிறது.நாடாளுமன்றத்தில் இது தொடா்பான... மேலும் பார்க்க

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எப்போதும் அச்சுறுத்தல்! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

அனைத்து காலகட்டத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா தெரிவித்துள்ளார்.கோவா உயர்நீதிமன்ற பார் கவுன்சில் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்கு பாராட்டு விழா!

மகாராஷ்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் 52 -ஆவது தலைமை நீதிபதியாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந... மேலும் பார்க்க

போலியான பார்சல், செல்ஃபி, முகத்தில் ஸ்பிரே! புனே சம்பவம் சொல்வது என்ன?

புனேவில், டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.டெலிவரி ஏஜெண்ட் போல, ஒரு போலியான பார்சலுடன், புனேவில் உள்ள அ... மேலும் பார்க்க