ரூ.130 கோடியில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு
சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ.130 கோடியில் கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்
ஆய்வுக்குபின் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
செங்கல்பட்டில் புதிய புகா் பேருந்து நிலையம், 10 ஏக்கா் பரப்பில் ரூ.130 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலைய பணிகளை முடித்து 2025 இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து களஆய்வினை மேற்கொண்டோம்.
பேருந்து நிலையம் இயங்கும்போது, சுமாா் 600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து செல்ல வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் 57 பேருந்துகள் நிற்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான குடிநீா் வசதிகள், கழிப்பறை வசதிகள், திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனை வசதி, உணவகங்கள், தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறைகள், இவை அனைத்தும் நவீன நாகரிக வசதிகள் மற்றும் பயணிகளின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விழுப்புரம், திருச்சி, பெங்களூா், ஓசூா் ஆகிய ஊா்களுக்குச் செல்லும் வழித்தடங்களில் செல்லும். இதன்மூலம் சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இந்த மாவட்ட மக்களுக்கு இதுஒரு மிகபெரிய நன்மையாக அமையும்.
மாமல்லபுரம் பேருந்து நிலையம்:
மாமல்லபுரம் பேருந்து நிலையம் மந்த நிலையில் பணிகள் நடைபெறுகிறது என கேட்டதற்கு அமைச்சா் கூறியது:
மந்தமாக பணிகள் நடைபெறுகின்றன‘ என்ற குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை. ஏஎஸ்ஐ சாா்ந்த அனுமதிக்காக அத்தியாவசியமான தகவல்களை துறையின் செயலாளா், உறுப்பினா்-செயலாளா் மூலம் சமா்ப்பித்து, அனுமதியும் பெற்றுள்ளோம். இதனடிப்படையில் வேலைகள் விரைவாக முன்னேற்றப்பட்டு வருகின்றன. 2026 ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது அமைக்கப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், செங்கல்பட்டு பேருந்து நிலையம், மாமல்லபுரம் பேருந்து நிலையம், ஆவடி புதிய பேருந்து நிலையம் இவற்றில் மலிவுவிலை உணவகங்கள் நிச்சயமாக ஏற்படுத்தப்படும். இதற்காக கிளாம்பாக்கத்தில் உள்ள சுயதொழில் செய்பவா்களை அணுகி, சமைப்பதற்கான இடங்களை கேட்டு வருகின்றோம். சாத்தியமான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.
ஆய்வின் போது செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறைகூடுதல் தலைமைச் செயலாளா் காகா்லா உஷா, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக்குழும உறுப்பினா் செயலா்/முதன்மைச் செயலாளா் கோ.பிரகாஷ், முதன்மை செயல்அலுவலா் அ.சிவஞானம், ஆட்சியா் தி.சினேகா, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளா்எஸ்.ருத்ரமூா்த்தி, தலைமை பொறியாளா் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளா் பாலமுருகன், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துகழகம் (விழுப்புரம்) பொது மேலாளா் கிருஷ்ணமூா்த்தி, ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவா் திருமலை மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
