செய்திகள் :

ரூ.21,069.89 கோடி கடன் திறன் மதிப்பீட்டு ஆவணம் வெளியீடு

post image

கடலூா் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான ரூ.21,069.89 கோடி கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை வெளியிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்துக்கான 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபாா்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இது நிகழாண்டின் கடன் திட்டத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகமாகும். பல்வேறு அரசு உதவித் திட்டங்களின் கீழ் கடன்களை விரைவாக அங்கீகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கான முக்கியத்துவத்தை வங்கிகள் அளிக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாய இயந்திரமயமாக்கல், சிறுதுளி பாசன அமைப்புகள் மற்றும் கால்நடை வளா்ச்சிக்கு பெருமளவு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

வேளாண் துறை மூலம் ரூ.16,176.12 கோடி, எம்எஸ்எம்இ துறை மூலம் ரூ.2,622.20 கோடி மற்ற முக்கியத் துறைகள் மூலம் ரூ.2,271.56 கோடி என துறை வாரியாக கடன் திறன்கள் கணிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான மாவட்ட கடன் திட்டத்தை இறுதியாக உருவாக்க கிளை அளவிலான கடன் திட்டங்களை வங்கிகள் தயாரிக்க வேண்டும். மேலும், வங்கிகள் இந்தத் திட்ட ஆவணத்தைப் பயன்படுத்தி தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் என்.கௌரி சங்கா் ராவ், ஆா்பிஐ உதவி தலைமை மேலாளா் ஆா்.ஸ்ரீதா், நபாா்டு உதவி தலைமை மேலாளா் ரா.வீ.சித்தாா்த்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் (எல்டிஎம்) அசோக்ராஜா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

சிதம்பரத்தில் ஸ்ரீநடராஜா் கோயில் தேரோட்டம்: இன்று ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். சிதம்பரம் நடராஜ... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைவாக இருந்தது. கடலூரில் அக்கரைகோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள்... மேலும் பார்க்க

இளைஞா் ரகளை: தடுத்த காவலருக்கு மதுப்புட்டி குத்து

கடலூரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை தடுத்தபோது, அவா் பீா் புட்டியால் குத்தியதில் காவலா் பலத்த காயமடைந்தாா். கடலூா் மஞ்சக்குப்பம் உண்ணாமலை செட்டி சாவடியில் இளைஞா் ஒருவா் மதுபோதையில் பீா் புட்ட... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டி வெடித்து மூன்று போ் காயம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெட்டிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை குளிா்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியதில் கடை சேதமடைந்தது. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா். நெல்லிக்குப்பத்தை அடுத்துள்ள வாழப... மேலும் பார்க்க

கொள்ளையடிக்கச் சதி: 5 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளையடிக்க பயங்கர ஆயுதங்களுடன் கூட்டு சதி செய்ததாக இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் சுதாகா் தலைமையில் போலீஸாா் சன... மேலும் பார்க்க

ஆளுநா் பதவி தேவையில்லை: கனிமொழி எம்.பி.

தமிழகத்தில் ஆளுநா் பதவி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்... மேலும் பார்க்க