செய்திகள் :

ரூ.6 கோடி வரி ஏய்ப்பு - சிக்கிய பொள்ளாச்சி நகைக்கடை உரிமையாளர்!

post image

கோவை மாவட்டம், தங்க நகை உற்பத்திக்கு பிரபலமானது. பல தங்க நகை உற்பத்தியாளர்கள் நகைகளை உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், ஏராளமான நகைக்கடைகளும் உள்ளன.

நகை

இதில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. அங்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் அவ்வபோது சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அப்படி நடத்தப்பட்ட சோதனையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வசமாக சிக்கியுள்ளது.

இதுகுறித்து கோவை ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள மொத்த, சில்லறை நகைக்கடைகளில் கடந்த பிப்ரவரி மாதம்1-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி வரை சோதனைகள் நடத்தப்பட்டன.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சட்டவிரோதமாக ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான ரசீது செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதற்காக அவர்கள் இரண்டு வகையான மென்பொருளை  பயன்படுத்தியுள்ளனர்.

ரூ.217 கோடி (305 கிலோ) மதிப்பிலான தங்க நகை வணிகத்தில் ரூ.6.53 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. கணக்கில் வராத 31கிலோ தங்கம், 409 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டது.” என்று கூறியுள்ளனர்.

பாண்டுரங்கன்

இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட பிஎஸ்பி ஜூவல்லரி உரிமையாளர் பாண்டுரங்கன் என்பவரை கைது செய்துள்ளனர். அவருக்கு வருகிற 10-ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொ... மேலும் பார்க்க

Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸ... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவு; வேறு ஒருவருடன் தொடர்பு..'' - பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலையடுத்து, வெப்படை காவல் நிலைய போலீஸார் சம்பவம் நடைபெற்ற இட... மேலும் பார்க்க

விருதுநகர்: `தனியார் பார்களில் லஞ்சம்..' - பணத்தோடு சிக்கிய கலால் வரித்துறை உதவி ஆணையர்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 58) என்பவர், விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில்... மேலும் பார்க்க

லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியை காரில் வந்த இருவர் மறித்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காருக்குள் ஆர்.டி.ஓ இருக்கிறார் லாரி எங்கிருந்து வருகிறது, பர்மிட் இருக்கா என கேட்டுள்ள... மேலும் பார்க்க

நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்... சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவர... மேலும் பார்க்க