செய்திகள் :

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!

post image

புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான, எம்.டி.என்.எல். ஏழு பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.8,346.24 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக நிறுவனம் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மொத்த கடன் மார்ச் 31, 2025 நிலவரப்படி ரூ.33,568 கோடியை எட்டியுள்ளதாக தனது ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா இடமிருந்து ரூ.3,633.42 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் இந்தியாவிலிருந்து ரூ.2,374.49 கோடியும், பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து ரூ.1,077.34 கோடியும், பஞ்சாப் நேஷனல் இந்தியாவிலிருந்து ரூ.464.26 கோடியும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் ரூ.350.05 கோடியும், யூகோ வங்கியில் ரூ.266.30 கோடியும், அசல் மற்றும் வட்டியுடன் ரூ.180.3 கோடியும் கடன் பாக்கி வைத்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.33,568 கோடியாக உள்ளது. இதில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியது ரூ.8,346 கோடியும், மாநில அரசு பத்திரங்களில் ரூ.24,071 கோடியும் மற்றும் தொலைத் தொடர்புத் துறையிடமிருந்து பெற்ற ரூ.1,151 கோடி கடன் ஆகியவை இதில் அடங்கும்.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயா்வு

மார்ச்சில் புதிதாக 4,440 5ஜி நிலையங்கள்!

நாட்டில் மார்ச் மாதத்தில் மட்டும் கூடுதலாக 4,440 5ஜி இணைய சேவைக்கான நிலையங்கள் (கோபுரங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் காந்தி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் பு... மேலும் பார்க்க

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில்... மேலும் பார்க்க

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

2,850 கோடி டாலராகக் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சா்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன... மேலும் பார்க்க