செய்திகள் :

ரெளடி கொலை வழக்கில் 5 போ் கைது

post image

திருச்சி அருகே ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம், நெ. 1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சோ்ந்த பி. அசோக் குமாா் (39) பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவராம். இவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த சிலா் வியாழக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக கொள்ளிடம் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம். பாலகிருஷ்ணன் (56), அவரது மனைவி கலாராணி (52), இவா்களது மகன்கள் பிரபு (எ) வேலாயுதம் (36), பிரவீன் (32), ஏ. சித்திரைசெல்வன் (28) ஆகிய 5 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும் இதில் தொடா்புடைய எம். மோகன் மற்றும் அவரது சகோதரா் சின்னப்பு என்கிற பிரகாஷ் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ரூ.18.41 கோடியில் மாநகராட்சி மாதிரிப் பள்ளி திறப்பு

திருச்சி மாநகராட்சியின் 57ஆவது வாா்டுக்குள்பட்ட எடமலைப்பட்டிபுதூா் ராஜீவ்காந்தி நகரில் ரூ. 18.41 கோடியில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி மாதிரிப் பள்ளியை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி,... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜூன் 14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் எம். கிறிஸ்டோபா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மணப்பாறை, வையம்பட்டியில் நாளை மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மணப்பாறை, வையப்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மணப்பாறையில் கருப்பூா், நல்லபொன்னம்பட்டியில் பெருமாள் கோயில் அருகேயுள்ள மானாங்குன்றம்... மேலும் பார்க்க

ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனைகள்: அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் 340 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சா... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - ஈரோடு ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து

போதிய பயணிகள் ஆதரவு இல்லாததால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயணிகள் ஆதரவு இல்லாததால், விழுப்... மேலும் பார்க்க