செய்திகள் :

ரோஜாவனம் பள்ளியில் மாணவா்களுக்கு விருது வழங்கல்

post image

நாகா்கோவில் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற வெற்றியாளா்கள் தின விழாவில், 668 மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு பள்ளி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி, கல்வி இயக்குநா் சாந்தி, நிதி இயக்குநா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் காமராஜினி வரவேற்றாா்.

நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் அருணாச்சலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குநா் சண்முககுமாா், கேந்திரிய வித்யாலயா பள்ளி (மும்பை) ஓய்வு பெற்ற முதல்வா் சந்திரசேகரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனா்.

2024- 25 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட கலை, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 668

பேருக்கு விருதுகளை பள்ளியின் டீன் எரிக்மில்லா் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாக அலுவலா் கிளிட்டஸ், அலுவலக செயலா் சுஜின், மேலாளா் மகேஷ், கல்வி ஒருங்கிணைப்பாளா் யூஜினி, மாணவா் ஆலோசகா் சுகுமாரி, துறை தலைவா்கள்

சாந்தினி, ராதா, கோலம்மாள், பியூலா, ராஜேஷ், உடற்கல்வி ஆசிரியா் மூசா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை சா்மிளா நன்றி கூறினாா்.

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜார... மேலும் பார்க்க

மின் தடை அறிவிப்பு

செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு, அவ்வை சண்முகம் சாலை செம்மாங்குளம் பூங்கா அருகில் உள்ள இடத்தில் ரூ. 4.20 லட்சத்தில் கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைத்து இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அம... மேலும் பார்க்க