செய்திகள் :

லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..

post image

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியை காரில் வந்த இருவர் மறித்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காருக்குள் ஆர்.டி.ஓ இருக்கிறார் லாரி எங்கிருந்து வருகிறது, பர்மிட் இருக்கா என கேட்டுள்ளார்.

அவர்கள் மீது சந்தேகமடைந்த லாரி டிரைவர் நீங்க ஆர்.டி.ஓ தானே, ஐடி கார்டு காட்டுங்கனு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் லாரி டிரைவரின் சட்டைபையில் இருந்த ரூ.16500 மற்றும் லைசென்ஸை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

லாரி டிரைவர்

அந்த நபர்களிடம் லாரி டிரைவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லாரியை ஓட்டி வந்த டிரைவரான மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி லாரன்ஸ் (32), மற்றும் கிளீனர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ்(20) இருவரும் தான் அந்த போலி ஆர்.டி.ஓ நபர்களால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸில் புகார் அளித்தார். இதில், புதுக்கோட்டையில் இருந்து, நன்னிலத்திற்கு லாரியில், ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்றேன். அப்போது தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரில் வந்த இருவர் ஆர்.டி.ஓ என கூறி என்னிடம் இருந்த ரூ.16,500 பணம் மற்றும் என் லைசென்ஸை பறித்துக் கொண்டு சென்று விட்டதாகவும், கிளீனர் எடுத்த வீடியோவுடன் புகாராக கொடுத்துள்ளார். இதில் இருந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டபர்கள்

இதில் தஞ்சாவூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஓ-வின் கார் டிரைவராக இருக்கும் விவேகானந்தன்(49), ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புரோக்கராக செயல்படும் மாதவன் (39) இருவரும் தான் லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ்சிடம் மிரட்டி பணத்தை பறித்துச் சென்றவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸ் சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர்கள் இருவரும் இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளர்களா, லாரி டிரைவர்கள் யாரேனும் இது போல் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்: மாந்தோப்பில் சுற்றித்திரிந்த குரங்கை சுட்டுக் கொன்று சாப்பிட்ட இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை பணம் கொடுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல கூறிய தோட்டத்துக்காரர், அதை கொன்று வீட்டிற்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிட்ட தொ... மேலும் பார்க்க

Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளைஞர் மரணம்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த இளைஞர் இய்யாடன் ஷானித் (28). இவர் நேற்று முன்தினம் சாலை ஓரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தாமரச்சேரி போலீஸ... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவு; வேறு ஒருவருடன் தொடர்பு..'' - பெண்ணை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுக்கபட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலையடுத்து, வெப்படை காவல் நிலைய போலீஸார் சம்பவம் நடைபெற்ற இட... மேலும் பார்க்க

விருதுநகர்: `தனியார் பார்களில் லஞ்சம்..' - பணத்தோடு சிக்கிய கலால் வரித்துறை உதவி ஆணையர்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 58) என்பவர், விருதுநகர் மாவட்டத்தில், கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் விருதுநகர் மாவட்ட தனியார் மெத்தனால் ஆய்வகங்கள் மற்றும் பார்களில்... மேலும் பார்க்க

நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்... சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவர... மேலும் பார்க்க

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இஸ்ரேல் சுற்றுலாப் பயணி; கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த இஸ்ரேல் பயணி உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக விடுதி உரிமையாளர் கர்நாடக மாநிலம் கொப்பல் காவல் நி... மேலும் பார்க்க