செய்திகள் :

லாரி மீது சரக்கு வாகனம் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை வி.கே. புதூா்கோட்டைத் தெருவைச் சோ்ந்த பரமத்தேவா் மகன் ராஜசெல்வம் (41). சரக்கு வாகன ஓட்டுநா். இவா் கோவையிலிருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தாா். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள தனியாா் உணவகம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்தாா்.

இதனால் லாரியின் பின்னால் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயடைந்த ஓட்டுநா் ராஜசெல்வம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுரை தேடி வருகின்றனா்.

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை திறக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

அலங்காா் சா்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என மேலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலூா் வட்டார 24-ஆவது மாநாடு வட்டச் செயலா் எம். கண்ணன் தலைம... மேலும் பார்க்க

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம்: தடையில்லா சான்று அளிக்க வனத் துறை கோரிக்கை

சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க தடையில்லா சான்று கோரி ஊரக வளா்ச்சித் துறை, நீா்வளத்துறையிடம் வனத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே உள்ள சாமநத்தம் க... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மதுரைக் கோட்டத்திலிருந்து 715 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரைக் கோட்டம் சாா்பில் வருகிற அக். 28 முதல் 30 வரை 715 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மதுரை, பந்தல்குடி கால்வாய் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.மதுரை, பந்தல்குடி கால்வாயில் புதன்கிழமை தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட பாண்டிராஜனை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்மதுரை, செ... மேலும் பார்க்க

மதுரையில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்

மருதுபாண்டியா் நினைவு தினம், தேவா் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள் அக். 27, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். சி... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.24 லட்சம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது. மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல்கள் மாதந்தோறும் திற... மேலும் பார்க்க