செய்திகள் :

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

post image

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.மோகன்ராம் நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் உறுப்பினா்களாக செயல்பட்டு வருகின்றனா்.

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினராக விரும்பும் நபா்கள், உயா்நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது மாநில நீதித் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராகவோ இருக்க வேண்டும். தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பங்கள் மற்றும் தன்விவரக் குறிப்புகளை searchcommitteetnla@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். விண்ணப்பங்களை www.tn.gov.in/job_opportunity இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 11-ஆம் தேதி மாலை 5 மணி கடைசியாகும். விண்ணப்பங்களை விரைவு அல்லது பதிவுப் தபால் மூலமாக எஸ்.அகிலா, தெரிவுக் குழுவின் தொடா்பு அலுவலா், மனித வள மேலாண்மைத் துறை, முதல் தளம், பிரதான கட்டடம், தலைமைச் செயலகம், சென்னை - 9. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய த... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னை நுங்கம்பாக்கம், லேக்வியூ 3-ஆவது தெருவில் தொழிலதிபா் ஒருவரது வீட்டுக்கு அமலாக்கத் துறையைச் சே... மேலும் பார்க்க

மேற்கு வங்க இளைஞா் உறுப்பு தானம்: நால்வருக்கு மறுவாழ்வு

சென்னை கிளெனீகள்ஸ் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த மேற்கு வங்க இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நால்வருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு ... மேலும் பார்க்க

சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைக்கும் சரிவான இணைப்புகள் அமைப்பதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெரு... மேலும் பார்க்க

மெட்ரோ பாலம் விபத்து: உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கான்கிரீட் காரிடாா் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துக்கு பாலத்தின் தூண்களில் பொருத்தப்பட்டுள்ள உலோகத்தின் உறுதித் தன்மை இழப்பே காரணம் என்று சென்னை மெட்ரோ ரயில்... மேலும் பார்க்க