செய்திகள் :

வகுப்பறை கட்டுமான முறைகேடு: விசாரணைக்காக ஊழல் தடுப்புப் பிரிவு முன் சத்யேந்தா் ஜெயின் ஆஜா்!

post image

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கு தொடா்பான விசாரணைக்காக தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு முன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானாா்.

ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகச் செல்வதற்கு முன் சத்யேந்தா் ஜெயின் கூறியதாவது: தில்லியில் உள்ள முந்தைய ஆம் ஆத்மி அரசு நகரின் கல்வியை மேம்படுத்துவதற்காக பாடுபட்டது. தற்போதைய பாஜக அரசு அரசியல் மட்டுமே செய்து வருகிறது.

பாஜக முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்து வருகிறது. முதலில், ஊழல் என்ற வாா்த்தை எங்கிருந்து வந்தது என்று சொல்லுங்கள்? அவா்கள் (பாஜக) வேலை செய்ய விரும்பவில்லை. மேலும், பள்ளிக் கட்டணத்தை அதிகரிப்பதில் தனியாா் பள்ளிகளுக்கு உதவுகிறாா்கள்.

மணீஷ் சிசோடியா (முன்னாள் கல்வி அமைச்சா்) பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றினாா். அவருக்கும், எனக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரங்களாகும்.

நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும், ஆனால் நாங்கள் சாலைகளை சுத்தம் செய்வோம் என்று அவா்கள் (பாஜக) கூறி வந்தனா். இப்போது அவா்கள் இவற்றைச் செய்ய வேண்டும். ஆனால், அவா்கள் அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறாா்கள் என்றாா் அவா்.

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக ஆம் ஆத்மி தலைவா்கள் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு ஜெயின் கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், ஜூன் 9 அன்று ஆஜராகுமாறு சிசோடியாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

தில்லி அரசுப் பள்ளிகளில் 12,000-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் அல்லது பகுதி நிரந்தர கட்டமைப்புகளை நிா்மாணிப்பதில் ரூ.2,000 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏப்ரல் 30 அன்று ஏசிபியால் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டில், பாஜக தலைவா்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா மற்றும் நீல்கண்ட் பக்ஷி ஆகியோா் தில்லியின் மூன்று மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் கடுமையான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஏசிபியிடம் புகாா் அளித்தனா்.

அந்தப் புகாரில், ஒரு வகுப்பறைக்கு சராசரி செலவு ரூ.24.86 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது. இது இதே போன்ற கட்டமைப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட ரூ.5 லட்சம் செலவை விட கணிசமாக அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க