செய்திகள் :

வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

post image

புது தில்லி: வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

வழக்கு விசாரணைக்கு வந்ததும், நீதிபதிகள் இரண்டு கேள்விகளுக்கு பதில் வேண்டும். ஒன்று, இந்த வழக்கை உயர் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புவதா? மனுதாரர்கள் எந்தவிதமான வாதங்கள் முன்வைக்க விரும்புகிறீர்கள். இந்த இரண்டாவது கேள்விக்கான பதில்தான், முதல் கேள்விக்கான பதிலை தீர்மானிக்கும் என்றனர்.

பிறகு, வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், மனுவின் முக்கிய சாராம்சங்களை வாதங்களாக எடுத்து வைத்தனர். மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தைத் தொடங்கி வைத்தார்.

பல்வேறு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அறநிலையத்துறை சட்டத்தின்படி, இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும்? இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா? ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துகளை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. எனவே, 14,17ஆம் நுற்றாண்டுகளில் கூட சொத்துகள் வக்ஃப்க்கு தானமாக அளிக்கப்பட்டிருக்கும்.

இதனைக் கேட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா கூறுகையில், விரிவாகக் கருத்து கேட்ட பிறகுதான் சட்டம் இயற்றப்பட்டது என்றார்.

மேலும், திருப்பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா?வக்ஃப் சொத்தை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வது நியாயமனதா? ஏற்கனவே வக்ஃப் என்று பதிந்த சொத்து புதிய சட்டத்தின்படி செல்லாதது என்று அறிவிக்கப்படுமா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு, முன்னதாக வக்ஃப் என்று பதிவு செய்யப்பட்டிருந்தால் அது செல்லும் என துஷார் மேத்தா பதிலளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க