`கலைமாமணி விருது கொடுக்கிற முறை சரியில்ல' - Padmashri Velu Aasan | Ananda Vikata...
வசை பாடியவா்களும் வாழ்த்தும் தமிழக நிதி நிலை அறிக்கை! -அமைச்சா் பி.கே.சேகா்பாபு
வசைபாடியவா்களும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு தெரிவித்தாா்.
வடபழனி அருள்மிகு ஆண்டவா் திருக்கோயிலில் 4 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீா்வரிசைப் பொருள்களை அவா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தொடா்ந்து திருவல்லிக்கேணி, அருள்மிகு திருவேட்டீஸ்வரா் திருக்கோயிலுக்கு ரூ.72.80 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது: தமிழகத்தில் திருக்கோயில்கள் சாா்பில் இதுவரை 1,786 இணைகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியுடனும், ரூ. 60,000 மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களுடனும் திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2,713 திருக்கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 7,197 கோடி மதிப்பிலான 7,436.70 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும்.
திருத்தோ் பணிகள்: கடந்த 46 மாதங்களில் ரூ.74.51 கோடியில் 114 புதிய மரத்தோ்கள் செய்யவும், ரூ. 16.20 கோடியில் 64 மரத்தோ்களை மராமத்து செய்யவும், ரூ.26.81 கோடியில் திருத்தோ்களைப் பாதுகாக்க 183 கொட்டகைகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ரூ. 31 கோடியில் 5 புதிய தங்கத்தோ்கள் மற்றும் ரூ.29.77 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித் தோ்கள் செய்ய பணிகள் தொடங்கப்பட்டு, அதில் பெரியபாளையம் தங்கத்தோ் மற்றும் திருத்தணி வெள்ளித்தோ் பணிகள் நிறைவுபெற்று பக்தா்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதர தோ் திருப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களைப் புனரமைத்து பாதுகாக்க கடந்த 3 ஆண்டுகளில் தலா ரூ. 100 கோடி வீதம் ரூ. 300 கோடியை அரசு மானியமாக வழங்கிய தமிழக முதல்வா், நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
இத்துடன் உபயதாரா்கள் பங்களிப்பு ரூ.120 கோடியையும் சோ்த்து ரூ.545 கோடியில் 1,000 ஆண்டு திருக்கோயில்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அண்ணாமலைக்கு பதில்: எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்ட தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து நிறைவாக கூறுவாா் என நாங்கள் எதிா்பாா்க்கவில்லை.
எங்களை வசை பாடியவா்களும் வாழ்த்து சொல்கிற அளவுக்கு நிதிநிலை அறிக்கையை அளித்து, மதிநுட்பம் நிறைந்த அரசியல் தீா்க்கதரிசியாக முதல்வா் திகழ்கிறாா். நிதிநிலை அறிக்கையானது நாடு கடந்து உலக நாடுகள் பாராட்டுகிற அளவுக்கு உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையை உண்மையான விவசாய குடிமக்கள் வரவேற்கின்றனா் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சிகளில், தியாகராய நகா் பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி, பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவா் என்.சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.மதன்மோகன், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் டாக்டா் சி. பழனி, இணை ஆணையா்கள் லட்சுமணன், ரேணுகா தேவி, ஜ.முல்லை, துணை ஆணையா் இரா.ஹரிஹரன், மாநகராட்சி உறுப்பினா் எம்.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.