செய்திகள் :

வடகரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

post image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியான நிலையில் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 11) காலை சுமார் 9.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காரியாட்டி வட்டம், கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் (வயது 54) க/பெ.ரவி மற்றும் தண்டியனேந்தலைச் சேர்ந்த கருப்பையா (வயது 37) த/பெ.அய்யணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். 

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன் (வயது 55), முருகன் (வயது 40), மாரியம்மாள் (வயது 40) மற்றும் பேச்சியம்மாள் (வயது 38) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். 

இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சில ஆண்களுக்கு மட்டும் மார்பகங்கள் பெரிதாக இருப்பது ஏன்? தடுப்பது எப்படி? சிகிச்சை என்ன?

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை?: எல்.முருகன்

முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத... மேலும் பார்க்க

பவன் கல்யாண் வரவிருந்த விமானத்தில் கோளாறு !

ஆந்திர துணை முதுல்வர் பவன் கல்யாண் மதுரைக்கு வரவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரவிருந்த நிலையில் விமானத்தில் கோளாறு ... மேலும் பார்க்க

ரூ.17,154 கோடியில் 9.620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள்! நெடுஞ்சாலைத் துறையில் புதிய வரலாறு!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் சாலைத் திட்டங்கள் - மேம்பாலப் பணிகளால் இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் எனப் புதிய வரலாறு படைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது... மேலும் பார்க்க

தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி: தப்பிய கார்!

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் திடீரென லாரியின் டயர் வெடித்து லாரி தீப்படித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகள... மேலும் பார்க்க

தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகி... மேலும் பார்க்க

திரைத்துறையில் உச்சம் தொட்ட விஜய்: சீமான் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்த நாளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடி வர... மேலும் பார்க்க